_ இணுவில் கந்தசுவாமி கோயில் அண்மையில் எழுதப்பட்ட வரலாறு
இலங்கையின் வடபுலம் பண்டைத் தமிழரின் பண்பாட்டுக்கு ஓர் உறைவிடம். இங்குள்ளவர்கள் பழைமையைப் பேணுவதில் மிகுந்த ஈடுபாடுடையவர்கள். இங்கு பழம்தமிழரின் பாரம்பரிய பழக்கவழக்கங்கள் ஆழமாக வேரூன்றியுள்ளன. யாழ்ப்பாணப் பழம்பதிகளுள் ஒன்றான இணுவில், சைவத் தமிழ்ப் பண்பாட்டுக்கு முதன்மை அளித்து வருவது யாவரும் அறிந்த உண்மையாகும். இணையிலி என்று பழங்காலத்தில் அறியப்பட்ட பெயர் காலப்போக்கில் மருவி இணுவில் என வழங்கப்படுகிறது
சைவ பாரம்பரியங்களில் இறுக்கமான பற்றுடைய இவ்வூரின் பட்டித் தொட்டியெல்லாம் இறைவழிப்பாடுகள் நடாத்தப்பட்டன. இறைவனின் திருவுருவை கோவிலென்று கும்பிடும் பழக்கம் இங்கு நீண்ட காலமாக உண்டு. இணுவிலின் கிழக்கெல்லையிலுள்ள காரைக்கால் சிவன் கோவில்வரை ஒரு வரிசையில் வைத்துப் பார்க்கும் பொழுது, எட்டுக் கோவில்கள் ஒன்றன் பின் ஒன்றாக அமைக்கப்பட்டன.
இவற்றுள் இணுவில் பெரிய கோவில் என்பது இணுவில் கந்தசுவாமி கோவிலைக் குறிக்கும். இங்கு கோவில் கொண்டுள்ள முருகனை நொச்சியம் பதியான், காஞ்சியம் பதியான், கல்யாண வேலவர் எனப் பல பெயர்களாற் சுட்டி அழைத்து வழிபடுபவர். இப்பெயர்கள் ஒவ்வொன்றுக்குமான பெயர்க்காரணமும் உண்டு. இக்கோவில் காலத்தால் முற்பட்ட வரலாற்றுப் பெருமையைத் தன்னகத்தே கொண்டதுடன் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கே அமையப்பெற்றுள்ளது. சங்குவேலி வயற்பரப்பில் இருந்து வருடா வருடம் இக்கோவிலுக்குத் தானமாக வழங்கப்படும் நெல்லில் இருந்து அரசகேசரி காலத்தில் உருவாக்கப்பட்ட தமிழ்ச் சங்கத்துடன் இக்கோவிலுக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது என்பது தெளிவாகிறது.
இவ்வூரின் வரலாறாக யாழ்ப்பாண வைபவமாலையில் செங்கரும்பும், செந்நெல்லும், கமுகும் தழைத்தோங்கும் இணுவிலில் மேழிக்கொடியுடையவனும் திரண்ட தோள்களையும் விரிந்த மார்பினையும் உடையவனும், குவளை மலர் மாலையை அணிந்த திருக்கோவிலூர் பேராயிரமுடையோன் முதலி ஆட்சித்தலைவனாக விளங்கினான் எனக்கூறப்படுகிறது. இவனது ஆட்சிக்காலம் கி.பி. 1365 என முதலியார் செ.இராசநாயகம் அவர்கள் யாழ்ப்பாணச் சரித்திரத்தில் கூறியுள்ளார். அவன் மரபில் வந்த கனகராச முதலி காலத்து ஆலயமாக இவ்வாலயம் கருதப்படுவதுடன் கிட்டத்தட்ட நான்கு நூற்றாண்டு கால வரலாற்றை இக்கோவில் கொண்டுள்ளது.
மயிலங்காடு தொடக்கம் ஆனைக்கோட்டை வரை எல்லைகளாக விரிந்திருந்த இணையிலி என்று அழைக்கப்பட்ட இணுவில் கிராமத்தில் முதலிக்குளம், காக்கைக்குளம் எனும் இரு குளங்கள் மூலம் வடக்கில் பருத்தி, கரும்பு, கமுகு ஆகியனவும் தெற்கில் செந்நெல்லும் தழைத்தோங்கியது. ஒரு நாள் இரவு கனகராச முதலியாரின் அரண்மணைப் பகுதியில் ஒரு ஒளிப்பிழம்பு தெரிவதை அவதானித்த அக்கிராம மக்கள் முதலியாரின் நெற்போர் தீப்பிடித்து எரிகின்றது எனக்கருதி அவரது அரண்மணையினை நோக்கி ஓடி வந்தனர்.
ஆனால் அங்கு எவ்வித அசம்பாவிதங்களும் இடம்பெறவில்லை. இந்த அதிசயத்திற்கான காரணத்தை முதலியாரிடம் வினாவிய போது அவர் சற்று முன் இரு பிராமணச் சிறுவர்கள் தன்னை அணுகி தாம் காஞ்சியில் இருந்து வந்ததாகவும் தம்மை ஆதரிக்குமாறு கூறி மறைந்து விட்டதாகவும் கூறினார். இது தனக்கும் தன் குடிமக்களுக்கும் அருள்பாலிக்கும் காஞ்சியம்பதி குமரகோட்டக் கந்தப்பெருமானின் அருள் என முதலியார் ஆனந்தமடைந்தார். திருவருள் சித்தத்திற்கு அமைய தன் இல்லத்தில் கந்தனுக்கு குடிலொன்றை அமைத்து முதலியார் வழிபட்டார் என்பது கர்ண பரம்பரைக் கதையாகும். அவருக்கு மக்கள் நினைவுக்கல் நாட்டி வழிபட்ட இடமே இன்று இவ்வாலயத்துக்கு முன்னால் உள்ள முதலியாரடி எனப்படும் சிறு ஆலயமாகும்.
போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்டு பின் அதே இடத்தில் 1661ஆம் ஆண்டு அமைக்கப்பட்டதே தற்போதைய இணுவில் கந்தசுவாமி ஆலயமாகும். பழங்குடிமகனான வேலாயுதரும், மனைவியும் முருகனிடத்தில் ஆராத அன்புடையவர்கள். அவர் ஒரு நாள் நித்திரையாக இருந்த பொழுது முருகப்பெருமான் கனவில் தோன்றி தான் காஞ்சியம்பதியில் இருந்து வருவதாகச் சொல்லி தனக்கு இல்லிடமொன்று அமைத்துத் தருமாறு கேட்டார். அதற்கு எங்கே அமைத்துத் தருவதென்று வேலாயுதர் வினவியதும் உமது வெற்றிலைத் தோட்டத்தில் நொச்சித்தடி நாட்டப்பட்டிருக்கிறது. அந்த இடத்தில் அமைக்கலாம் என்று கனவில் முருகப்பெருமான் கூறினார்.
மறுநாள் பொழுது புலர்ந்நது. என்ன அதிசயம்! வேலாயுதரின் வெற்றிலைத் தோட்டத்தில் நொச்சித்தடி ஒன்று புதிதாய் நாட்டப்பட்டிருந்தது. கனவில் காட்சி தந்து இல்லிடம் கேட்டது முருகப்பெருமான் என்றே நம்பினார். முருகப்பெருமானின் திருக்குறிப்பை நிறைவேற்ற மனம் கொண்ட வேலாயுதர் தமது தோட்டத்தில் இருந்த மாட்டுக்குடிலை நொச்சித்தடி நடப்பட்டிருந்த இடத்தில் கொண்டு வந்து வைத்தார். கனவில் தோன்றிய முருகன் காஞ்சியம்பதி எனக் குறிப்பிட்டது காஞ்புரம் குமரகோட்டக் கந்தன் என்பதையும் உணர்ந்து கொண்டார். அதற்கமைய ஆலயம் அமைந்துள்ள காணியின் பெயர் நொச்சியொல்லை மிதியன் என வழங்கப்படுவதுடன் புராதன தல விருட்சமான நொச்சி மரம் கருவறைக்கருகில் தற்போதும் உள்ளது.
நாளடைவில் அவரது வெற்றிலைத் தோட்டம் அடியார்கள் வழிபடும் வணக்கத்தலமாக மாறியது. அயலவர்களும், ஊர்மக்களும் அங்கு வந்து வழிபடுவதோடு பொங்கல், பூசைகளை நடாத்தி முருகனை வழிபட்டனர். முருகப்பெருமானின் திருவருளை நாடிவந்த அடியார்களுக்கு அருணாசலம் அவர்கள் வாக்குச் சித்தி கூறும் ஒரு சித்தரும் ஆனார். அடியார் தொகை அதிகரித்ததால், வேற்பெருமான் இருந்த மாட்டுக்குடிலை மாற்றி அமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. அவ்விடத்தில் செங்கற்கோவில் வேலை குறுகிய காலத்தில் நிறைவுற்றதும் வேலவரை அங்கு பிரதிஷ்டை செய்து கும்பாபிசேகம் நடைபெற்றது.
அருணாசலம் அவர்கள் முதுமையுற்று உடல் வலு இழந்த பின்பு அவரது மூத்தமகன் சுப்பிரமணியம் அவர்கள் கோவில் நடவடிக்கைகளைக் கவனித்தார். ஆனால் பூசை, வழிபாடுகளைச் செய்ய அவருக்கு இயலாதிருந்தது. அதனால் பூசைக்கு ஓர் அந்தணரை ஏற்பாடு செய்தார். வெள்ளைக் கற்கோவில் கட்டு வேலை நடந்து கொண்டிருந்த பொழுது சுப்பிரமணியம் அவர்கள் இறைவனடி எய்திவிட்டார். அவருக்கு பின் அவரது மகன் ஆறுமுகம் தமது தந்தையாரின் கடமைகளைப் பொறுப்பேற்றுத் திறம்படச் செயலாற்றினார். முருகன் திருவருளால் அவருக்கும் வாக்குச் சித்தி கைகூடியது. அத்துடன் வைத்தியத்திலும் அவருக்கு நற்பெயர் உண்டாயிற்று. நாட்பட்ட தீராத புண்நோய்களை இவர் தயாரித்த முறையிலான எண்ணெயை அவரது வழிச் சந்ததியினர் இப்பொழுது தயாரிக்கின்றனர் என்பது சிறப்பான ஒரு விடயமாகும்.
இந்த வகையில் இணுவில் கந்தசுவாமி கோவில் மந்திரமும், மருந்தும் வழங்கி மக்களின் அல்லல் தீர்க்கும் அருமைத் திருத்தலமாக மாறியது. இவ்வேளையில் ஆறுமுகம் அவர்கள் தனி ஒருவராய் நின்று பொழிந்தெடுத்த வெள்ளைக் கற்கோவிலை நிறைவேற்றக் கால தாமதமானதுடன் நிதி நெருக்கடியும் ஏற்பட்டது. மிகுந்த வேதனையுடன் முருகனை நினைத்த வண்ணம் ஒரு நாள் இரவு நித்திரைக்குச் சென்றார். உள்ளன்புடன் முருகனை நினைத்ததால் வேதனையோடு படுத்திருந்த ஆறுமுகத்தாரின் கனவில் முருகன் தோன்றி, தாவடியைச் சேர்ந்த கோமேசு முதலியாரிடம் செல்லுமாறு பணித்தார். அவ்வாறே முதலியாரின் கனவில் முருகன் தோன்றி இணுவில் ஆறுமுகத்தின் திருப்பணிக்கு நிதி உதவும்படி பணித்தார். இருவரும் தாம் கண்ட கனவில் புதுமையை எண்ணியவாறு மீதி இரவைக் கழித்தனர். மறுநாள் காலைப் பொழுதானதும் ஆறுமுகத்தார் முதலியாரின் வீட்டுக்குச் சென்றதும், இருவரும் முருகன் அருளை நினைத்து பெரிதும் வியந்ததுடன் கோவில் கட்டுமான வேலைகளை கோமேசு முதலியார் தமது தம்பியின் உதவியுடன் நிறைவேற்றினார்.
வெள்ளைக்கல் திருப்பணி வேலை நடந்து கொண்டிருந்த பொழுது கட்டிய கற்களுள் கோறைக் கல் ஒன்றும் இருந்தது. அதனை அறியாத ஆசாரி கோறைக் கல்லையும் சேர்த்து கட்டி விட்டார். குறித்த கோறைக் கல்லை கட்டடத்திலிருந்து அகற்ற வேண்டும் என்பதற்காக முருகப்பெருமான் சிறிய அணிற்பிள்ளை வடிவில் வந்து கோறக் கல்லின் மேல் குதித்து விளையாடினார். அணிற்பிள்ளையின் விளையாட்டு ஆசாரிக்கு சினமூட்டியது. அதனால் சிறுகல் ஒன்றை எடுத்து அதன் மீது எறிந்தார். அணில் உடனே அவ்விடத்தை விட்டு ஓடி மறைந்து விட்டது. இந்நிகழ்வு ஆசாரிக்கு முக்கியமாகத் தெரியவில்லை.
ஆனால் அன்று இரவு அணில் பிள்ளை ஒன்று அங்கு வந்து வெள்ளைக் கல்லின் மேல் துள்ளி விளையாடியதையும், அந்தக் கல்லுள் கோறை ஒன்று இருக்கிறது என்பதையும் ஆறுமுகத்தாரின் கனவில் முருகன் உணர்த்தினார். மறுநாள் காலை ஆறுமுகத்தார் எழுந்து வந்து, கல்லைத் தட்டிப் பார்த்தார். அப்பொழுது குறித்த கல்லினுள் கோறை இருப்பதைக் கண்டார். முருகப்பெருமான் விளையாட்டாக வந்து உணர்த்திய அற்புதத்தை அங்கு நின்றோருக்குச் சொல்லி அகமகிழ்ந்தார்.
1840 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு குடமுழுக்குச் செய்யப்பட்ட இவ்ஆலயத்தின் முகாமைத்துவம், பூசை, அருள்வாக்கு மற்றும் பிணிதீர்த்தல் போன்ற அனைத்தையும் ஆறுமுகத்தார் ஒருவராகவே கவனித்து வந்தார். இக்காலத்தில் நித்திய பூசையில் ஈடுபட்டிருந்த சின்னயர் அவர்கள் இவ்வாலயத்திற்கு வள்ளி,தெய்வயானையுடன் கூடிய ஆறுமுக சுவாமியை மயில் வாகனத்துடன் சேர்த்து ஐம்பொன்னில் வார்த்தெடுக்க விரும்பினார். கோவில் ஐயருக்கு குழந்தைச் செல்வம் கிடைக்கப் பெறாததால் இம்முயற்சியில் மிகத் தீவிரமாக ஈடுபட்டார். அதனால் கோவில் வளவில் வைத்து ஆறுமுகரை இருமுறை வார்ப்பித்தார். ஆனால் அது சரியாக அமையவில்லை.
ஐயரின் உக்கிர நிலையை உணர்ந்த கோவில் மணியம் ஆறுமுகம் அவர்கள், ஐயரை அழைத்து அருள்வாக்குச் சொன்னார். ஐயரின் எண்ணம் நிறைவேறுவதற்கு அவரும், அவரது மனைவியும் சேர்ந்து மடிபிச்சை எடுத்து, அதனை பொங்கல் செய்து முருகனுக்கு அமுது படைத்துவிட்டுப் பின்பு வேலை தொடங்கும்படியும் மேலும் மயில் வாகனம் இல்லாமல் திருச்செந்தூரில் இருப்பதைப்போன்ற நின்ற தோற்றத்தில் ஆறுமுக சுவாமியை ஸ்தபதி வீட்டில் வைத்து வார்க்கும்படி சொன்னார். மூன்றாவது முறை ஸ்தபதி வீட்டில் வைத்து வார்த்த பொழுது, ஐயரின் மனைவி தனது கழுத்தில் இருந்த தங்கப்பவுண் தாலி மற்றும் கொடியை கழற்றி விக்கிரகம் வார்க்கும் பாத்திரத்தில் போட்டார். அந்த முறை பார்க்கத் தெவிட்டாத ஆறுமுக சுவாமி விக்கிரகம் அற்புதமாய் அமைந்தது. இந்த மூர்த்தியளவு உயரம், அழகு, தெய்வீகப் பொலிவு யாவும் நிரம்பிய விக்கிரகத்தை உலகில் எங்கும் காண்பது அரிது என்பதுடன் தமிழகத்தில் இருந்து வந்தவர்களே பார்த்துப் பரவச முற்றுள்ளனர்.
இணுவில் கந்தசுவாமி கோவில் ஆரம்பத்தில் மாட்டுக் குடிலாய் இருந்து, செங்கற் கோவிலாய் மாறி, பின் வெள்ளைக் கற்கோவிலாக தோற்றம் பெற்றது. மொட்டைக் கோபுரம் மற்றும் மூன்று தளங்களை கொண்ட இராசகோபுரம் என இரு கோபுரங்களுக்கிடையே பெரியதொரு மண்டபமும் கொண்ட கோவிலை யாழ்பாணக் கிராமப் புறங்களில் காண்பது அரிது.
இவ்வாறான அமைப்பினையுடைய இந்த ஆலயத்தின் மீது இணுவைத் தவஞானியாகிய பெரிய சந்தியாசியாரின் கண்ணோட்டம் சென்றது. சுப்பிரமணியம் என்ற பிள்ளைப் பெயர் கொண்ட இத்தவஞானி இவ்வாலயத்திற்கு அழகியதொரு திருமஞ்சம் செய்து வைக்க விரும்பினார். அந்த பெரியவரின் அருள் ஆட்சியின் கீழ் பல அற்புதங்கள் நிகழ்ந்துள்ளன. அந்த முறையில் உருவானதே இணுவில் கந்தசுவாமி கோவிலின் கலைச்செல்வம் என்று பாராட்டப் பெறும் இணுவில் மஞ்சம் ஆகும். இந்த மஞ்சத்தைச் செய்வதற்கு தேவையான மூலவளங்கள் எல்லாம் இவ்வூரில் இருந்தே பெறப்பட்டன. இதனை உருவாக்கிய சிற்பாச்சாரிகள், தவஞானியின் அருள் கடாட்சத்தால் தாய்த் தமிழகத்தில் இருந்து வந்து உதவினார்கள். இதன் வடிவமைப்பு பெரிய சந்நியாசியாரின் ஞானக்காட்சியில் தோன்றும் அருள் வடிவமாகும்.
மஞ்சத்தின் உயரம், அகலம் ,சுற்றளவு சிற்பவேலைப்பாடுகள் எல்லாம் பெரியவரின் எண்ணபடியே உருவாக்கப்பட்டன. முப்பத்தைந்து அடி உயரமான இந்த திரு மஞ்சத்திற்கு நான்கு சில்லும், மேலே ஐந்து கலசங்களும் பொருத்தப் பெற்றுள்ளன. இந்த அருமையான மஞ்சத்தில் வள்ளி, தெய்வயானை சமேதரமாக ஆறுமுக சுவாமி கொலுவிருந்து மகோற்சவத்தில் பன்னிரண்டாம் திருவிழாவன்றும், தைப்பூசத் திருநாளன்றும் திருவீதியில் ஊர்ந்து வரும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாகும்.
ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு காலத்தை எட்டிப்பிடித்துள்ள இந்த மஞ்சத்தைப் போன்று ஒரு மஞ்சம் இலங்கையிலோ, இந்தியாவிலோ, வேறு எங்குமோ காணமுடியாது என தொல்பொருள் ஆராச்சியாளர் பலர் கூறியுள்ளார்கள்.உலக பெருமஞ்சம் இது தான் என வரலாற்று அறிஞர்கள் பாராட்டியுள்ளார்கள். இந்த மஞ்சம் மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் புதுப்பிக்கப்பட்டு, நன்கு பேணுவதற்காக நாற்பதடி உயரமான மஞ்சக் கொட்டகையும் நிரந்தரமாக கட்டப்பட்டுள்ளது. இந்த மஞ்சம் தனது நேர்முக மேற்பார்வையின் கீழ் அமைக்கப்பட வேண்டும் என்பதன் பொருட்டுப் பெரிய சந்நியாசியார் தங்கி இருந்த கொட்டிலுக்குப் பக்கத்தில் வைத்தே அமைக்கப் பெற்றது. அதனால் மஞ்சம் அமைக்கப்பட்ட இடம் இப்பொழுது மஞ்சத்தடி என காரணப் பெயராக வழங்கப்படுகிறது.
பெரிய சந்நியாசியார் உலாவிய மஞ்சத்தடிப் பகுதி ஒரே புனித பூமியாகும். இதனை மனதிற் கொண்டே ஊர் மக்கள் பெரிய சந்தியாசிரியரின் பொன்னுடலை அவ்விடத்திலேயே சமாதியாக்கி கோவில் ஒன்றையும் கட்டி, பின்பு வேற்பெருமானை பிரதிஷ்டை செய்துள்ளனர். இச்சமாதிக் கோவில் வளர்ச்சியுற்று, தற்போது நித்திய, நைமித்திய பூசைகள் நடைபெறுகின்றன.
பெரியவர் காலத்தில் இணுவில் கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழாவன்று நொச்சியம் பதியில் இருந்து காரைக்கால் சிவன் கோவில் வரை ஐந்து தேர்கள் சென்று திருவீதிவலம் வந்து காட்சி அற்புதமானது. தேர் இழுப்பதற்காக அந்நாளில் பயன்படுத்தப்பட்ட 32 அடி அகன்ற வீதியை இன்றும் காணலாம். 1967 ஆம் ஆண்டு இரு விமானங்களைக் கொண்ட கருவறை அமைக்கப் பெற்று, முன்பு மூலவராய் இருந்த வேற்பெருமானை நீக்கிவிட்டு, வள்ளி, தெய்வானையுடன் கூடிய முத்துக் குமாரசுவாமியை பிரதிஷ்டை செய்து மகாகும்பாபிஷேகமும் நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை தொடர்ந்து நித்திய, நைமித்திய பூசைகளும் ஒழுங்காக நடைபெறுகின்றன. 1968 ஆம் ஆண்டு தொடக்கம் ஆண்டுப் பெருவிழாவுடன் ஏனைய திருவிழாக்களும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. திருப்பணி வேலைகளும் அவ்வப்போது மேற்கொள்ளப்படுகின்றன.1988 ஆம் ஆண்டு புனராவர்த்தனைப் பிரதிஷ்டை கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் ஐந்து தளவாயிற் கோபுரமும் அமைக்கப்பட்டது. இலண்டனில் இருந்து கண்டாமணியும் தருவிக்கப்பட்டு, புதிதாக மணிக்கோபுரம் அமைக்கப் பெற்று மணி ஏற்றப்பட்டது.
ஓர் ஆலயத்தின் கீர்த்திக்கு அவ்வாலயத்தில் அமைந்துள்ள புண்ணிய தீர்த்தமும் விசேட சிறப்பைத் தருகின்றது. அந்த வகையில் இவ்வாலயத்தின் வடக்குப் பக்கத்தில் உள்ள சாந்தியடி வயிரவர் சந்நிதியும் அதன் முன்பாகவுள்ள தீர்த்த கிணறும் மிக பிரசித்தமானவை அடியார்களை பீடித்த நோய்களைக் குணப்படுத்திச் சாந்தி அளிக்கும் தன்மை இத்தீர்த்தத்திற்கு உண்டு. அடியார்களுக்கு ஏற்படும் அல்லல்களைக் களைத்து ஆறுதல் தந்து சாந்தி அளிக்கும் சாந்தியடி வயிரவப் பெருமானும், நொச்சியம் பதி முருகப்பெருமானும் இணுவையம் பதி மக்களின் கண்கண்ட தெய்வங்கள் என்பதும் மனம் கொள்ளத்தக்கன.
நன்றி: பரிபாலனச் சபைத்தலைவர் எஸ். சோதிப்பெருமாள்
இலங்கையின் வடபுலம் பண்டைத் தமிழரின் பண்பாட்டுக்கு ஓர் உறைவிடம். இங்குள்ளவர்கள் பழைமையைப் பேணுவதில் மிகுந்த ஈடுபாடுடையவர்கள். இங்கு பழம்தமிழரின் பாரம்பரிய பழக்கவழக்கங்கள் ஆழமாக வேரூன்றியுள்ளன. யாழ்ப்பாணப் பழம்பதிகளுள் ஒன்றான இணுவில், சைவத் தமிழ்ப் பண்பாட்டுக்கு முதன்மை அளித்து வருவது யாவரும் அறிந்த உண்மையாகும். இணையிலி என்று பழங்காலத்தில் அறியப்பட்ட பெயர் காலப்போக்கில் மருவி இணுவில் என வழங்கப்படுகிறது
சைவ பாரம்பரியங்களில் இறுக்கமான பற்றுடைய இவ்வூரின் பட்டித் தொட்டியெல்லாம் இறைவழிப்பாடுகள் நடாத்தப்பட்டன. இறைவனின் திருவுருவை கோவிலென்று கும்பிடும் பழக்கம் இங்கு நீண்ட காலமாக உண்டு. இணுவிலின் கிழக்கெல்லையிலுள்ள காரைக்கால் சிவன் கோவில்வரை ஒரு வரிசையில் வைத்துப் பார்க்கும் பொழுது, எட்டுக் கோவில்கள் ஒன்றன் பின் ஒன்றாக அமைக்கப்பட்டன.
இவற்றுள் இணுவில் பெரிய கோவில் என்பது இணுவில் கந்தசுவாமி கோவிலைக் குறிக்கும். இங்கு கோவில் கொண்டுள்ள முருகனை நொச்சியம் பதியான், காஞ்சியம் பதியான், கல்யாண வேலவர் எனப் பல பெயர்களாற் சுட்டி அழைத்து வழிபடுபவர். இப்பெயர்கள் ஒவ்வொன்றுக்குமான பெயர்க்காரணமும் உண்டு. இக்கோவில் காலத்தால் முற்பட்ட வரலாற்றுப் பெருமையைத் தன்னகத்தே கொண்டதுடன் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கே அமையப்பெற்றுள்ளது. சங்குவேலி வயற்பரப்பில் இருந்து வருடா வருடம் இக்கோவிலுக்குத் தானமாக வழங்கப்படும் நெல்லில் இருந்து அரசகேசரி காலத்தில் உருவாக்கப்பட்ட தமிழ்ச் சங்கத்துடன் இக்கோவிலுக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது என்பது தெளிவாகிறது.
இவ்வூரின் வரலாறாக யாழ்ப்பாண வைபவமாலையில் செங்கரும்பும், செந்நெல்லும், கமுகும் தழைத்தோங்கும் இணுவிலில் மேழிக்கொடியுடையவனும் திரண்ட தோள்களையும் விரிந்த மார்பினையும் உடையவனும், குவளை மலர் மாலையை அணிந்த திருக்கோவிலூர் பேராயிரமுடையோன் முதலி ஆட்சித்தலைவனாக விளங்கினான் எனக்கூறப்படுகிறது. இவனது ஆட்சிக்காலம் கி.பி. 1365 என முதலியார் செ.இராசநாயகம் அவர்கள் யாழ்ப்பாணச் சரித்திரத்தில் கூறியுள்ளார். அவன் மரபில் வந்த கனகராச முதலி காலத்து ஆலயமாக இவ்வாலயம் கருதப்படுவதுடன் கிட்டத்தட்ட நான்கு நூற்றாண்டு கால வரலாற்றை இக்கோவில் கொண்டுள்ளது.
மயிலங்காடு தொடக்கம் ஆனைக்கோட்டை வரை எல்லைகளாக விரிந்திருந்த இணையிலி என்று அழைக்கப்பட்ட இணுவில் கிராமத்தில் முதலிக்குளம், காக்கைக்குளம் எனும் இரு குளங்கள் மூலம் வடக்கில் பருத்தி, கரும்பு, கமுகு ஆகியனவும் தெற்கில் செந்நெல்லும் தழைத்தோங்கியது. ஒரு நாள் இரவு கனகராச முதலியாரின் அரண்மணைப் பகுதியில் ஒரு ஒளிப்பிழம்பு தெரிவதை அவதானித்த அக்கிராம மக்கள் முதலியாரின் நெற்போர் தீப்பிடித்து எரிகின்றது எனக்கருதி அவரது அரண்மணையினை நோக்கி ஓடி வந்தனர்.
ஆனால் அங்கு எவ்வித அசம்பாவிதங்களும் இடம்பெறவில்லை. இந்த அதிசயத்திற்கான காரணத்தை முதலியாரிடம் வினாவிய போது அவர் சற்று முன் இரு பிராமணச் சிறுவர்கள் தன்னை அணுகி தாம் காஞ்சியில் இருந்து வந்ததாகவும் தம்மை ஆதரிக்குமாறு கூறி மறைந்து விட்டதாகவும் கூறினார். இது தனக்கும் தன் குடிமக்களுக்கும் அருள்பாலிக்கும் காஞ்சியம்பதி குமரகோட்டக் கந்தப்பெருமானின் அருள் என முதலியார் ஆனந்தமடைந்தார். திருவருள் சித்தத்திற்கு அமைய தன் இல்லத்தில் கந்தனுக்கு குடிலொன்றை அமைத்து முதலியார் வழிபட்டார் என்பது கர்ண பரம்பரைக் கதையாகும். அவருக்கு மக்கள் நினைவுக்கல் நாட்டி வழிபட்ட இடமே இன்று இவ்வாலயத்துக்கு முன்னால் உள்ள முதலியாரடி எனப்படும் சிறு ஆலயமாகும்.
போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்டு பின் அதே இடத்தில் 1661ஆம் ஆண்டு அமைக்கப்பட்டதே தற்போதைய இணுவில் கந்தசுவாமி ஆலயமாகும். பழங்குடிமகனான வேலாயுதரும், மனைவியும் முருகனிடத்தில் ஆராத அன்புடையவர்கள். அவர் ஒரு நாள் நித்திரையாக இருந்த பொழுது முருகப்பெருமான் கனவில் தோன்றி தான் காஞ்சியம்பதியில் இருந்து வருவதாகச் சொல்லி தனக்கு இல்லிடமொன்று அமைத்துத் தருமாறு கேட்டார். அதற்கு எங்கே அமைத்துத் தருவதென்று வேலாயுதர் வினவியதும் உமது வெற்றிலைத் தோட்டத்தில் நொச்சித்தடி நாட்டப்பட்டிருக்கிறது. அந்த இடத்தில் அமைக்கலாம் என்று கனவில் முருகப்பெருமான் கூறினார்.
மறுநாள் பொழுது புலர்ந்நது. என்ன அதிசயம்! வேலாயுதரின் வெற்றிலைத் தோட்டத்தில் நொச்சித்தடி ஒன்று புதிதாய் நாட்டப்பட்டிருந்தது. கனவில் காட்சி தந்து இல்லிடம் கேட்டது முருகப்பெருமான் என்றே நம்பினார். முருகப்பெருமானின் திருக்குறிப்பை நிறைவேற்ற மனம் கொண்ட வேலாயுதர் தமது தோட்டத்தில் இருந்த மாட்டுக்குடிலை நொச்சித்தடி நடப்பட்டிருந்த இடத்தில் கொண்டு வந்து வைத்தார். கனவில் தோன்றிய முருகன் காஞ்சியம்பதி எனக் குறிப்பிட்டது காஞ்புரம் குமரகோட்டக் கந்தன் என்பதையும் உணர்ந்து கொண்டார். அதற்கமைய ஆலயம் அமைந்துள்ள காணியின் பெயர் நொச்சியொல்லை மிதியன் என வழங்கப்படுவதுடன் புராதன தல விருட்சமான நொச்சி மரம் கருவறைக்கருகில் தற்போதும் உள்ளது.
நாளடைவில் அவரது வெற்றிலைத் தோட்டம் அடியார்கள் வழிபடும் வணக்கத்தலமாக மாறியது. அயலவர்களும், ஊர்மக்களும் அங்கு வந்து வழிபடுவதோடு பொங்கல், பூசைகளை நடாத்தி முருகனை வழிபட்டனர். முருகப்பெருமானின் திருவருளை நாடிவந்த அடியார்களுக்கு அருணாசலம் அவர்கள் வாக்குச் சித்தி கூறும் ஒரு சித்தரும் ஆனார். அடியார் தொகை அதிகரித்ததால், வேற்பெருமான் இருந்த மாட்டுக்குடிலை மாற்றி அமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. அவ்விடத்தில் செங்கற்கோவில் வேலை குறுகிய காலத்தில் நிறைவுற்றதும் வேலவரை அங்கு பிரதிஷ்டை செய்து கும்பாபிசேகம் நடைபெற்றது.
அருணாசலம் அவர்கள் முதுமையுற்று உடல் வலு இழந்த பின்பு அவரது மூத்தமகன் சுப்பிரமணியம் அவர்கள் கோவில் நடவடிக்கைகளைக் கவனித்தார். ஆனால் பூசை, வழிபாடுகளைச் செய்ய அவருக்கு இயலாதிருந்தது. அதனால் பூசைக்கு ஓர் அந்தணரை ஏற்பாடு செய்தார். வெள்ளைக் கற்கோவில் கட்டு வேலை நடந்து கொண்டிருந்த பொழுது சுப்பிரமணியம் அவர்கள் இறைவனடி எய்திவிட்டார். அவருக்கு பின் அவரது மகன் ஆறுமுகம் தமது தந்தையாரின் கடமைகளைப் பொறுப்பேற்றுத் திறம்படச் செயலாற்றினார். முருகன் திருவருளால் அவருக்கும் வாக்குச் சித்தி கைகூடியது. அத்துடன் வைத்தியத்திலும் அவருக்கு நற்பெயர் உண்டாயிற்று. நாட்பட்ட தீராத புண்நோய்களை இவர் தயாரித்த முறையிலான எண்ணெயை அவரது வழிச் சந்ததியினர் இப்பொழுது தயாரிக்கின்றனர் என்பது சிறப்பான ஒரு விடயமாகும்.
இந்த வகையில் இணுவில் கந்தசுவாமி கோவில் மந்திரமும், மருந்தும் வழங்கி மக்களின் அல்லல் தீர்க்கும் அருமைத் திருத்தலமாக மாறியது. இவ்வேளையில் ஆறுமுகம் அவர்கள் தனி ஒருவராய் நின்று பொழிந்தெடுத்த வெள்ளைக் கற்கோவிலை நிறைவேற்றக் கால தாமதமானதுடன் நிதி நெருக்கடியும் ஏற்பட்டது. மிகுந்த வேதனையுடன் முருகனை நினைத்த வண்ணம் ஒரு நாள் இரவு நித்திரைக்குச் சென்றார். உள்ளன்புடன் முருகனை நினைத்ததால் வேதனையோடு படுத்திருந்த ஆறுமுகத்தாரின் கனவில் முருகன் தோன்றி, தாவடியைச் சேர்ந்த கோமேசு முதலியாரிடம் செல்லுமாறு பணித்தார். அவ்வாறே முதலியாரின் கனவில் முருகன் தோன்றி இணுவில் ஆறுமுகத்தின் திருப்பணிக்கு நிதி உதவும்படி பணித்தார். இருவரும் தாம் கண்ட கனவில் புதுமையை எண்ணியவாறு மீதி இரவைக் கழித்தனர். மறுநாள் காலைப் பொழுதானதும் ஆறுமுகத்தார் முதலியாரின் வீட்டுக்குச் சென்றதும், இருவரும் முருகன் அருளை நினைத்து பெரிதும் வியந்ததுடன் கோவில் கட்டுமான வேலைகளை கோமேசு முதலியார் தமது தம்பியின் உதவியுடன் நிறைவேற்றினார்.
வெள்ளைக்கல் திருப்பணி வேலை நடந்து கொண்டிருந்த பொழுது கட்டிய கற்களுள் கோறைக் கல் ஒன்றும் இருந்தது. அதனை அறியாத ஆசாரி கோறைக் கல்லையும் சேர்த்து கட்டி விட்டார். குறித்த கோறைக் கல்லை கட்டடத்திலிருந்து அகற்ற வேண்டும் என்பதற்காக முருகப்பெருமான் சிறிய அணிற்பிள்ளை வடிவில் வந்து கோறக் கல்லின் மேல் குதித்து விளையாடினார். அணிற்பிள்ளையின் விளையாட்டு ஆசாரிக்கு சினமூட்டியது. அதனால் சிறுகல் ஒன்றை எடுத்து அதன் மீது எறிந்தார். அணில் உடனே அவ்விடத்தை விட்டு ஓடி மறைந்து விட்டது. இந்நிகழ்வு ஆசாரிக்கு முக்கியமாகத் தெரியவில்லை.
ஆனால் அன்று இரவு அணில் பிள்ளை ஒன்று அங்கு வந்து வெள்ளைக் கல்லின் மேல் துள்ளி விளையாடியதையும், அந்தக் கல்லுள் கோறை ஒன்று இருக்கிறது என்பதையும் ஆறுமுகத்தாரின் கனவில் முருகன் உணர்த்தினார். மறுநாள் காலை ஆறுமுகத்தார் எழுந்து வந்து, கல்லைத் தட்டிப் பார்த்தார். அப்பொழுது குறித்த கல்லினுள் கோறை இருப்பதைக் கண்டார். முருகப்பெருமான் விளையாட்டாக வந்து உணர்த்திய அற்புதத்தை அங்கு நின்றோருக்குச் சொல்லி அகமகிழ்ந்தார்.
1840 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு குடமுழுக்குச் செய்யப்பட்ட இவ்ஆலயத்தின் முகாமைத்துவம், பூசை, அருள்வாக்கு மற்றும் பிணிதீர்த்தல் போன்ற அனைத்தையும் ஆறுமுகத்தார் ஒருவராகவே கவனித்து வந்தார். இக்காலத்தில் நித்திய பூசையில் ஈடுபட்டிருந்த சின்னயர் அவர்கள் இவ்வாலயத்திற்கு வள்ளி,தெய்வயானையுடன் கூடிய ஆறுமுக சுவாமியை மயில் வாகனத்துடன் சேர்த்து ஐம்பொன்னில் வார்த்தெடுக்க விரும்பினார். கோவில் ஐயருக்கு குழந்தைச் செல்வம் கிடைக்கப் பெறாததால் இம்முயற்சியில் மிகத் தீவிரமாக ஈடுபட்டார். அதனால் கோவில் வளவில் வைத்து ஆறுமுகரை இருமுறை வார்ப்பித்தார். ஆனால் அது சரியாக அமையவில்லை.
ஐயரின் உக்கிர நிலையை உணர்ந்த கோவில் மணியம் ஆறுமுகம் அவர்கள், ஐயரை அழைத்து அருள்வாக்குச் சொன்னார். ஐயரின் எண்ணம் நிறைவேறுவதற்கு அவரும், அவரது மனைவியும் சேர்ந்து மடிபிச்சை எடுத்து, அதனை பொங்கல் செய்து முருகனுக்கு அமுது படைத்துவிட்டுப் பின்பு வேலை தொடங்கும்படியும் மேலும் மயில் வாகனம் இல்லாமல் திருச்செந்தூரில் இருப்பதைப்போன்ற நின்ற தோற்றத்தில் ஆறுமுக சுவாமியை ஸ்தபதி வீட்டில் வைத்து வார்க்கும்படி சொன்னார். மூன்றாவது முறை ஸ்தபதி வீட்டில் வைத்து வார்த்த பொழுது, ஐயரின் மனைவி தனது கழுத்தில் இருந்த தங்கப்பவுண் தாலி மற்றும் கொடியை கழற்றி விக்கிரகம் வார்க்கும் பாத்திரத்தில் போட்டார். அந்த முறை பார்க்கத் தெவிட்டாத ஆறுமுக சுவாமி விக்கிரகம் அற்புதமாய் அமைந்தது. இந்த மூர்த்தியளவு உயரம், அழகு, தெய்வீகப் பொலிவு யாவும் நிரம்பிய விக்கிரகத்தை உலகில் எங்கும் காண்பது அரிது என்பதுடன் தமிழகத்தில் இருந்து வந்தவர்களே பார்த்துப் பரவச முற்றுள்ளனர்.
இணுவில் கந்தசுவாமி கோவில் ஆரம்பத்தில் மாட்டுக் குடிலாய் இருந்து, செங்கற் கோவிலாய் மாறி, பின் வெள்ளைக் கற்கோவிலாக தோற்றம் பெற்றது. மொட்டைக் கோபுரம் மற்றும் மூன்று தளங்களை கொண்ட இராசகோபுரம் என இரு கோபுரங்களுக்கிடையே பெரியதொரு மண்டபமும் கொண்ட கோவிலை யாழ்பாணக் கிராமப் புறங்களில் காண்பது அரிது.
இவ்வாறான அமைப்பினையுடைய இந்த ஆலயத்தின் மீது இணுவைத் தவஞானியாகிய பெரிய சந்தியாசியாரின் கண்ணோட்டம் சென்றது. சுப்பிரமணியம் என்ற பிள்ளைப் பெயர் கொண்ட இத்தவஞானி இவ்வாலயத்திற்கு அழகியதொரு திருமஞ்சம் செய்து வைக்க விரும்பினார். அந்த பெரியவரின் அருள் ஆட்சியின் கீழ் பல அற்புதங்கள் நிகழ்ந்துள்ளன. அந்த முறையில் உருவானதே இணுவில் கந்தசுவாமி கோவிலின் கலைச்செல்வம் என்று பாராட்டப் பெறும் இணுவில் மஞ்சம் ஆகும். இந்த மஞ்சத்தைச் செய்வதற்கு தேவையான மூலவளங்கள் எல்லாம் இவ்வூரில் இருந்தே பெறப்பட்டன. இதனை உருவாக்கிய சிற்பாச்சாரிகள், தவஞானியின் அருள் கடாட்சத்தால் தாய்த் தமிழகத்தில் இருந்து வந்து உதவினார்கள். இதன் வடிவமைப்பு பெரிய சந்நியாசியாரின் ஞானக்காட்சியில் தோன்றும் அருள் வடிவமாகும்.
மஞ்சத்தின் உயரம், அகலம் ,சுற்றளவு சிற்பவேலைப்பாடுகள் எல்லாம் பெரியவரின் எண்ணபடியே உருவாக்கப்பட்டன. முப்பத்தைந்து அடி உயரமான இந்த திரு மஞ்சத்திற்கு நான்கு சில்லும், மேலே ஐந்து கலசங்களும் பொருத்தப் பெற்றுள்ளன. இந்த அருமையான மஞ்சத்தில் வள்ளி, தெய்வயானை சமேதரமாக ஆறுமுக சுவாமி கொலுவிருந்து மகோற்சவத்தில் பன்னிரண்டாம் திருவிழாவன்றும், தைப்பூசத் திருநாளன்றும் திருவீதியில் ஊர்ந்து வரும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாகும்.
ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு காலத்தை எட்டிப்பிடித்துள்ள இந்த மஞ்சத்தைப் போன்று ஒரு மஞ்சம் இலங்கையிலோ, இந்தியாவிலோ, வேறு எங்குமோ காணமுடியாது என தொல்பொருள் ஆராச்சியாளர் பலர் கூறியுள்ளார்கள்.உலக பெருமஞ்சம் இது தான் என வரலாற்று அறிஞர்கள் பாராட்டியுள்ளார்கள். இந்த மஞ்சம் மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் புதுப்பிக்கப்பட்டு, நன்கு பேணுவதற்காக நாற்பதடி உயரமான மஞ்சக் கொட்டகையும் நிரந்தரமாக கட்டப்பட்டுள்ளது. இந்த மஞ்சம் தனது நேர்முக மேற்பார்வையின் கீழ் அமைக்கப்பட வேண்டும் என்பதன் பொருட்டுப் பெரிய சந்நியாசியார் தங்கி இருந்த கொட்டிலுக்குப் பக்கத்தில் வைத்தே அமைக்கப் பெற்றது. அதனால் மஞ்சம் அமைக்கப்பட்ட இடம் இப்பொழுது மஞ்சத்தடி என காரணப் பெயராக வழங்கப்படுகிறது.
பெரிய சந்நியாசியார் உலாவிய மஞ்சத்தடிப் பகுதி ஒரே புனித பூமியாகும். இதனை மனதிற் கொண்டே ஊர் மக்கள் பெரிய சந்தியாசிரியரின் பொன்னுடலை அவ்விடத்திலேயே சமாதியாக்கி கோவில் ஒன்றையும் கட்டி, பின்பு வேற்பெருமானை பிரதிஷ்டை செய்துள்ளனர். இச்சமாதிக் கோவில் வளர்ச்சியுற்று, தற்போது நித்திய, நைமித்திய பூசைகள் நடைபெறுகின்றன.
பெரியவர் காலத்தில் இணுவில் கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழாவன்று நொச்சியம் பதியில் இருந்து காரைக்கால் சிவன் கோவில் வரை ஐந்து தேர்கள் சென்று திருவீதிவலம் வந்து காட்சி அற்புதமானது. தேர் இழுப்பதற்காக அந்நாளில் பயன்படுத்தப்பட்ட 32 அடி அகன்ற வீதியை இன்றும் காணலாம். 1967 ஆம் ஆண்டு இரு விமானங்களைக் கொண்ட கருவறை அமைக்கப் பெற்று, முன்பு மூலவராய் இருந்த வேற்பெருமானை நீக்கிவிட்டு, வள்ளி, தெய்வானையுடன் கூடிய முத்துக் குமாரசுவாமியை பிரதிஷ்டை செய்து மகாகும்பாபிஷேகமும் நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை தொடர்ந்து நித்திய, நைமித்திய பூசைகளும் ஒழுங்காக நடைபெறுகின்றன. 1968 ஆம் ஆண்டு தொடக்கம் ஆண்டுப் பெருவிழாவுடன் ஏனைய திருவிழாக்களும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. திருப்பணி வேலைகளும் அவ்வப்போது மேற்கொள்ளப்படுகின்றன.1988 ஆம் ஆண்டு புனராவர்த்தனைப் பிரதிஷ்டை கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் ஐந்து தளவாயிற் கோபுரமும் அமைக்கப்பட்டது. இலண்டனில் இருந்து கண்டாமணியும் தருவிக்கப்பட்டு, புதிதாக மணிக்கோபுரம் அமைக்கப் பெற்று மணி ஏற்றப்பட்டது.
ஓர் ஆலயத்தின் கீர்த்திக்கு அவ்வாலயத்தில் அமைந்துள்ள புண்ணிய தீர்த்தமும் விசேட சிறப்பைத் தருகின்றது. அந்த வகையில் இவ்வாலயத்தின் வடக்குப் பக்கத்தில் உள்ள சாந்தியடி வயிரவர் சந்நிதியும் அதன் முன்பாகவுள்ள தீர்த்த கிணறும் மிக பிரசித்தமானவை அடியார்களை பீடித்த நோய்களைக் குணப்படுத்திச் சாந்தி அளிக்கும் தன்மை இத்தீர்த்தத்திற்கு உண்டு. அடியார்களுக்கு ஏற்படும் அல்லல்களைக் களைத்து ஆறுதல் தந்து சாந்தி அளிக்கும் சாந்தியடி வயிரவப் பெருமானும், நொச்சியம் பதி முருகப்பெருமானும் இணுவையம் பதி மக்களின் கண்கண்ட தெய்வங்கள் என்பதும் மனம் கொள்ளத்தக்கன.
நன்றி: பரிபாலனச் சபைத்தலைவர் எஸ். சோதிப்பெருமாள்