உ
சிவமயம்
இணுவில்
செகராசசேகர பிள்ளையார் திருக்கோவில்
வரலாறு
கி.பி 12 ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி 17 ஆம் நூற்றாண்டு வரை ஏறக்குறைய 500 ஆண்டுகள் ஈழத் -தமிழகத்தில் ஆரிய சக்கரவர்த்திகள் என்றழைக்கப்பட்ட தமிழ் மன்னர்கள் ஆட்சி நிலவியிருந்தது அந்தத் தமிழரசர்கள்
வரிசையில் இற்றைக்கு 700 ஆண்டுகளுக்கு முன் யாழ்ப்பாணத்தை ஆண்டிருந்த சிங்கைச் செகராசசேகர மன்னனால்
இணுவிலின் மேற்கு பகுதியில் நிறுவப்பட்டு வழிபடப் பட்டு வந்த திருக்கோவில் இணுவில் செகராசசேகர பிள்ளையார்
ஆலயம்
வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த இறைதளி பருத்தி அடைப்புப் பிள்ளையார் எனவும் குறிக்கப்பட்டு வருகின்றது பருத்தித் தோட்டச் சூழலில் இவ்வாலயம் அமைந்திருந்தமையாலே இப்பெயர் வழங்கப் பெற்ற தென்பர்.அக்காலத்தில் யாழ்ப்பாணத்துப் பல ஊர்களிலும் பருத்திப் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்தமைக்கு இன்றும் பல குறிச்சிகள் அழைக்கபடுவது சான்றாக அமைகின்றது. இச் செகராசசேகர பிள்ளையார் ஆலயத்தில் பல அற்புதங்கள் நிகழ்ந்தன என ஆன்றோர்கள் கூறுவதாகச் செகராசசேகரப்பிள்ளைதமிழ் நூலின் முன்னுரையில் முன்னாள் யாழ் பல்கலைக்கழகப் பேராசிரியர் கலாநிதி.இ.பாலசுந்தரம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். சைவத்தைத் தூயநெறியில் வளர்த்துப் பேணிய கிராமங்களுள் இணுவில் சிறப்புப் பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 16 ஆம் நூற்றாண்டில் இலங்கையை வன்பறிப்புச் செய்து ஆட்சி செய்த போர்த்துகேயர் தமது கத்தோலிக்க மதத்தை ஈழத்தல் பரப்புதற்பொருட்டு இங்குள்ள சைவக்கோவில்களை எல்லாம் இடித்தழித்தனர். அந்த அழிப்புக்கு உள்ளாகாமல் நின்று நிலைத்து வரும் அருள் வலிமை மிக்கதாகச் செகராசசேகரப்பிள்ளையார்ஆலயம் விளங்குகின்றது பேர்த்துக்கேயர் ஆட்சி மறைந்தது அடுத்து வந்த ஒல்லாந்தர் ஆட்சி மறைந்து.ஆங்கிலேயர் ஆட்சி
நிலவிய காலத்தில் இலங்கையில் ஆங்கிலக்கல்வியும்,கிறிஸ்துமதமும் வேகமாகப் பரப்பப்பட்டன.தமிழ்க்கல்வியும்,
சைவசமயமும் ஆங்கில அரசினால் ஈழத்தில் திட்டமிட்டு அழிக்கப்பட்டு வந்தன இந்த நிலையில் 19 ஆம்நூற்றாண்டில்
யாழ்ப்பாண நல்லூரில வந்தவதரித்த ஆறுமுகநாவலர் சைவமும் தமிழும் காக்கப் புயலாகச் செயற்பட்டார் அவர் உருவாக்கிய தமிழ்சைவப் பேராசான்கள் பலரில் ஒருவர் இணுவில் சுப்பிரமணியச்சட்டம்பியார்.இவர் செகராசசேகரப்
பிள்ளையார் கோவிலின் தெற்கு வீதியையொட்டி அமைந்த தமது வீட்டில் திண்ணைப்பள்ளி நடாத்தி இணுவில் இளந்
தலைமுறைகட்குத் தமிழ் சைவக்கல்வியை இலவசமாக ஊட்டி வந்தார்.இவர் போலமு.வேங்கடாசலம்ஐயர்எனப்பட்ட
நாவலரின் இன்னொரு மாணாக்கர் இணுவில் கந்தசுவாமி கோவிலின் மேற்கு வீதி வளாகத்தில் ஒரு திண்ணைப்பள்ளி
நிறுவி சைவத்தமிழ்க்கல்வியும்.சைவநெறி வாழ்வுப் பயிற்சியும் வழங்கி வந்தார். இவர் போன்று சரவணச்சட்டம்பியார்
என்பவர் இணுவில் சிவன் கோவில் சூழலில் ஒரு திண்ணைப்பள்ளி மூலம் தமிழ் சைவக்கல்வி பரப்பி வந்தார்.
திண்ணைப்பள்ளி மூலம் சைவத்தமிழ்க் கல்விச் செழிப்பு மிக்கசூழலாகசெகராசசேகரப்பிள்ளையாரடியைமாற்றி
வந்த சுப்பிரமணியச்சட்டம்பியாரே இக்கோவிலின் உரிமையாளராகவும் விளங்கி வந்தார் இவருக்குப் பின் இவர்தம்
புதல்வி செல்வம் என்பவரை மணம்புரிந்த சங்கரப்பிள்ளை அவர்கள் கோவிலைப் பரிபாலித்து வந்தார். இவர் ஊரில்
வீடுவீடாகப்பிடியரிசிசேகரித்துச்சாந்துக்கட்டடமாகக்காணப்பட்டகருவறை.அர்த்தமண்டபம்.மகாமண்டபம்என்பவற்றைப்
பொளி கற்களால் மீளமைப்புச் செய்துவைத்தார்.இவருக்குப்பின்இவர்மகன்சின்னத்துரைதொடர்ந்துசெய்தமுயற்சியால்
ஊர்மக்களின் உதவியுடன் வசந்தமண்டபம் முதலான மண்டபம் முதலான மண்டபம்கள் அமையப் பிள்ளையார்அருள்
பாலித்தார். இத்திருப்பணிகளில் பெரும்பங்காற்றியோரில் குறிப்பிடத்தக்கவர்கள் அமரர் வல்லிபுரம் இராசதுரை,
இணுவில் அமரர் சந்திரசேகரம் முதலானோராவார்.மேலும் இணுவில் பொன்னம்பலம இளையதம்பி என்பவரால்
கண்டாமணியும் அதற்கான மணிக்கோபுரமும் இக்கோவிலுக்கு அமைக்கப்பட்டுள்ளன. இக் கோவில் தேர்த்திருவிழா
உபயகாரர்களான நாராயணபிள்ளை இராமுப்பிள்ளையின் புதல்வர்களால் விநாயகனடியார்களின் தாராள நிதியுதவிகளின் துணைகொண்டு ஒர்அழகியசிற்பத்தேர்செய்துவழங்கப்பட்டது.விநாயகனடியார்களின்நிதியுதவிகளின்
துணை கொண்டு இளையதம்பி பொன்னம்பலம் அவர்களால் எழில்மிகுசப்பறம்ஒன்றுநிர்மாணித்துவழங்கப்பட்டுள்ளது
திரு.சின்னத்துரை அவர்களுக்குப் பின் அவர் மைந்தார் சுந்தரலிங்கம் மூலம் மூர்த்தியை பாலஸ்தாபனம் செய்து
வைத்து அடியார்களின் நிதியுதவியைப் பெற்று மண்டபங்களைப் புணருத்தாரணம் செய்வித்தார்.அத்துடன் வைத்தியர்
விநாசித்தம்பி குடும்பத்தினர் நிறுவிய பஞ்சமுக விநாயகர் விக்கிரகம். பரிவார முருகன். கோவில் என்பவற்றோடு.
வைரவர். நடராஜர். மகாலட்சுமி விக்கிரகங்களை நிறுவியும் பரிவாரமூர்த்திகளான சந்தானகோபாலர்.தட்சணாமூர்த்தி
சிவன்.அம்மன்என்பார்க்குத்தனிக்கோவில்கள்அமைத்தும்திருப்பணிநிறைவேற்றினார்.11.02.2004அன்றுமங்கலகரமான
கும்பாபிசேகம் நிகழ்ந்தேறியது. இவ்வாலயத்தில் சித்திரைநிறைமதிநாளன்றுதீர்த்தத்திருவிழாநிகழும்.மகோற்சவமும்
மாதந்தோறுமான விநாயகர் சதுர்த்தித் திருவிழாவும்.21நாட்கள் நிகழும்.விநாயகர் சட்டித் திருவிழாஆண்டு தோறும்
நிகழ்ந்துவருகின்றதுஇவற்றைவிடமுருகனுக்கானநவராத்திரிசிவனுக்கானமார்கழித்திருவெம்பாவைஅபிடேகங்களும்
விதிமுறைப்படி இடம்பெற்று வருகின்றன அன்றாடம்மூன்றுகாலப்பூசைகள்நடைபெற்றுவருகின்றனவெள்ளிக்கிழமை
மாலைப் பூசை வேளைகளில் அமரர் செல்வர்வல்லிபுரம்அவர்கள்தொடக்கிவைத்தஇளையோரின்கூட்டுப்பிரார்த்தனை
-களும் அவ்வப்போது தொடர் புராணபடனங்களும் இக் கோவிலின் அருட்பொலிவுக்கு அணிசேர்த்து வருகின்றன
செகராசசேகர
........................
..மிக விரைவில்
சிவமயம்
இணுவில்
செகராசசேகர பிள்ளையார் திருக்கோவில்
வரலாறு
கி.பி 12 ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி 17 ஆம் நூற்றாண்டு வரை ஏறக்குறைய 500 ஆண்டுகள் ஈழத் -தமிழகத்தில் ஆரிய சக்கரவர்த்திகள் என்றழைக்கப்பட்ட தமிழ் மன்னர்கள் ஆட்சி நிலவியிருந்தது அந்தத் தமிழரசர்கள்
வரிசையில் இற்றைக்கு 700 ஆண்டுகளுக்கு முன் யாழ்ப்பாணத்தை ஆண்டிருந்த சிங்கைச் செகராசசேகர மன்னனால்
இணுவிலின் மேற்கு பகுதியில் நிறுவப்பட்டு வழிபடப் பட்டு வந்த திருக்கோவில் இணுவில் செகராசசேகர பிள்ளையார்
ஆலயம்
வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த இறைதளி பருத்தி அடைப்புப் பிள்ளையார் எனவும் குறிக்கப்பட்டு வருகின்றது பருத்தித் தோட்டச் சூழலில் இவ்வாலயம் அமைந்திருந்தமையாலே இப்பெயர் வழங்கப் பெற்ற தென்பர்.அக்காலத்தில் யாழ்ப்பாணத்துப் பல ஊர்களிலும் பருத்திப் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்தமைக்கு இன்றும் பல குறிச்சிகள் அழைக்கபடுவது சான்றாக அமைகின்றது. இச் செகராசசேகர பிள்ளையார் ஆலயத்தில் பல அற்புதங்கள் நிகழ்ந்தன என ஆன்றோர்கள் கூறுவதாகச் செகராசசேகரப்பிள்ளைதமிழ் நூலின் முன்னுரையில் முன்னாள் யாழ் பல்கலைக்கழகப் பேராசிரியர் கலாநிதி.இ.பாலசுந்தரம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். சைவத்தைத் தூயநெறியில் வளர்த்துப் பேணிய கிராமங்களுள் இணுவில் சிறப்புப் பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 16 ஆம் நூற்றாண்டில் இலங்கையை வன்பறிப்புச் செய்து ஆட்சி செய்த போர்த்துகேயர் தமது கத்தோலிக்க மதத்தை ஈழத்தல் பரப்புதற்பொருட்டு இங்குள்ள சைவக்கோவில்களை எல்லாம் இடித்தழித்தனர். அந்த அழிப்புக்கு உள்ளாகாமல் நின்று நிலைத்து வரும் அருள் வலிமை மிக்கதாகச் செகராசசேகரப்பிள்ளையார்ஆலயம் விளங்குகின்றது பேர்த்துக்கேயர் ஆட்சி மறைந்தது அடுத்து வந்த ஒல்லாந்தர் ஆட்சி மறைந்து.ஆங்கிலேயர் ஆட்சி
நிலவிய காலத்தில் இலங்கையில் ஆங்கிலக்கல்வியும்,கிறிஸ்துமதமும் வேகமாகப் பரப்பப்பட்டன.தமிழ்க்கல்வியும்,
சைவசமயமும் ஆங்கில அரசினால் ஈழத்தில் திட்டமிட்டு அழிக்கப்பட்டு வந்தன இந்த நிலையில் 19 ஆம்நூற்றாண்டில்
யாழ்ப்பாண நல்லூரில வந்தவதரித்த ஆறுமுகநாவலர் சைவமும் தமிழும் காக்கப் புயலாகச் செயற்பட்டார் அவர் உருவாக்கிய தமிழ்சைவப் பேராசான்கள் பலரில் ஒருவர் இணுவில் சுப்பிரமணியச்சட்டம்பியார்.இவர் செகராசசேகரப்
பிள்ளையார் கோவிலின் தெற்கு வீதியையொட்டி அமைந்த தமது வீட்டில் திண்ணைப்பள்ளி நடாத்தி இணுவில் இளந்
தலைமுறைகட்குத் தமிழ் சைவக்கல்வியை இலவசமாக ஊட்டி வந்தார்.இவர் போலமு.வேங்கடாசலம்ஐயர்எனப்பட்ட
நாவலரின் இன்னொரு மாணாக்கர் இணுவில் கந்தசுவாமி கோவிலின் மேற்கு வீதி வளாகத்தில் ஒரு திண்ணைப்பள்ளி
நிறுவி சைவத்தமிழ்க்கல்வியும்.சைவநெறி வாழ்வுப் பயிற்சியும் வழங்கி வந்தார். இவர் போன்று சரவணச்சட்டம்பியார்
என்பவர் இணுவில் சிவன் கோவில் சூழலில் ஒரு திண்ணைப்பள்ளி மூலம் தமிழ் சைவக்கல்வி பரப்பி வந்தார்.
திண்ணைப்பள்ளி மூலம் சைவத்தமிழ்க் கல்விச் செழிப்பு மிக்கசூழலாகசெகராசசேகரப்பிள்ளையாரடியைமாற்றி
வந்த சுப்பிரமணியச்சட்டம்பியாரே இக்கோவிலின் உரிமையாளராகவும் விளங்கி வந்தார் இவருக்குப் பின் இவர்தம்
புதல்வி செல்வம் என்பவரை மணம்புரிந்த சங்கரப்பிள்ளை அவர்கள் கோவிலைப் பரிபாலித்து வந்தார். இவர் ஊரில்
வீடுவீடாகப்பிடியரிசிசேகரித்துச்சாந்துக்கட்டடமாகக்காணப்பட்டகருவறை.அர்த்தமண்டபம்.மகாமண்டபம்என்பவற்றைப்
பொளி கற்களால் மீளமைப்புச் செய்துவைத்தார்.இவருக்குப்பின்இவர்மகன்சின்னத்துரைதொடர்ந்துசெய்தமுயற்சியால்
ஊர்மக்களின் உதவியுடன் வசந்தமண்டபம் முதலான மண்டபம் முதலான மண்டபம்கள் அமையப் பிள்ளையார்அருள்
பாலித்தார். இத்திருப்பணிகளில் பெரும்பங்காற்றியோரில் குறிப்பிடத்தக்கவர்கள் அமரர் வல்லிபுரம் இராசதுரை,
இணுவில் அமரர் சந்திரசேகரம் முதலானோராவார்.மேலும் இணுவில் பொன்னம்பலம இளையதம்பி என்பவரால்
கண்டாமணியும் அதற்கான மணிக்கோபுரமும் இக்கோவிலுக்கு அமைக்கப்பட்டுள்ளன. இக் கோவில் தேர்த்திருவிழா
உபயகாரர்களான நாராயணபிள்ளை இராமுப்பிள்ளையின் புதல்வர்களால் விநாயகனடியார்களின் தாராள நிதியுதவிகளின் துணைகொண்டு ஒர்அழகியசிற்பத்தேர்செய்துவழங்கப்பட்டது.விநாயகனடியார்களின்நிதியுதவிகளின்
துணை கொண்டு இளையதம்பி பொன்னம்பலம் அவர்களால் எழில்மிகுசப்பறம்ஒன்றுநிர்மாணித்துவழங்கப்பட்டுள்ளது
திரு.சின்னத்துரை அவர்களுக்குப் பின் அவர் மைந்தார் சுந்தரலிங்கம் மூலம் மூர்த்தியை பாலஸ்தாபனம் செய்து
வைத்து அடியார்களின் நிதியுதவியைப் பெற்று மண்டபங்களைப் புணருத்தாரணம் செய்வித்தார்.அத்துடன் வைத்தியர்
விநாசித்தம்பி குடும்பத்தினர் நிறுவிய பஞ்சமுக விநாயகர் விக்கிரகம். பரிவார முருகன். கோவில் என்பவற்றோடு.
வைரவர். நடராஜர். மகாலட்சுமி விக்கிரகங்களை நிறுவியும் பரிவாரமூர்த்திகளான சந்தானகோபாலர்.தட்சணாமூர்த்தி
சிவன்.அம்மன்என்பார்க்குத்தனிக்கோவில்கள்அமைத்தும்திருப்பணிநிறைவேற்றினார்.11.02.2004அன்றுமங்கலகரமான
கும்பாபிசேகம் நிகழ்ந்தேறியது. இவ்வாலயத்தில் சித்திரைநிறைமதிநாளன்றுதீர்த்தத்திருவிழாநிகழும்.மகோற்சவமும்
மாதந்தோறுமான விநாயகர் சதுர்த்தித் திருவிழாவும்.21நாட்கள் நிகழும்.விநாயகர் சட்டித் திருவிழாஆண்டு தோறும்
நிகழ்ந்துவருகின்றதுஇவற்றைவிடமுருகனுக்கானநவராத்திரிசிவனுக்கானமார்கழித்திருவெம்பாவைஅபிடேகங்களும்
விதிமுறைப்படி இடம்பெற்று வருகின்றன அன்றாடம்மூன்றுகாலப்பூசைகள்நடைபெற்றுவருகின்றனவெள்ளிக்கிழமை
மாலைப் பூசை வேளைகளில் அமரர் செல்வர்வல்லிபுரம்அவர்கள்தொடக்கிவைத்தஇளையோரின்கூட்டுப்பிரார்த்தனை
-களும் அவ்வப்போது தொடர் புராணபடனங்களும் இக் கோவிலின் அருட்பொலிவுக்கு அணிசேர்த்து வருகின்றன
செகராசசேகர
........................
..மிக விரைவில்