இணுவில் அறிவாலயம்
உலகப்பெருமஞ்சம்
இணுவிலின் தவப்புதல்வர்கள்
இணுவில் மக்களின் நலனுக்காக சிலர் மக்களோடு வாழ்ந்து தவம் இயற்றுகின்றனர்.
இணுவிலும் கலையும்
இணுவில் கிராமத்து மக்கள் அன்று தொடக்கம் இன்று வரை கலைத்துறையிலே ஆர்வம் கொண்டவர்கள். இணுவில் மக்களின் வாழ்விலே கலையுணர்வானது பின்னிப்பிணைந்துள்ளது.இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழும் ஒருங்கே இணைந்து காணப்படுகின்ற ஒரு கிராமமாகும். இதற்கு சான்றாக யாழ் பல்கலைக்கழகத்தின் நுண்கலைப்பீடமானது இணுவிலில் அமைந்து சான்று பகருகின்றது. இது அன்றைய காலத்தில் சேர் பொன் இராமநாதனால் உருவாக்கப்பட்டு இன்று பல்கலைக்கழகமாக திகழ்ந்து இம்;மண்ணுக்கு பெருமை சேர்க்கின்றது.
எத்தனையோ பெரிய மகான்களும், கல்வி மான்களும், கவிஞர்களும், சிற்பாச்சாரியர்களும், நடன மேதைகளும், தவில் வித்துவான்களும், நாதஸ்வர வித்துவான்களும், பாடகர்களும் வாழும் ஒரு கலைப்பொக்கிஷமாக திகழும் ஒரு கிராமமாகும். இக்கிராமத்தின் மற்றுமொரு சிறப்பானது அதிகளவிலான கோயில்களைக் கொண்டிருந்து அதனூடாக இக்கலைகளை வளர்க்கக்கூடியதான பாக்கியம் கிடைக்கப்பெற்றதாகும். எல்லாவீட்டிலும் வாழும் சிறார்கள் முதல் பெரியவர்கள் வரையில் எதாவதொரு கலைத்துறையில் ஆர்வம் காட்டுபவர்களாகவே காணப்படுகின்றனர். எனவே பிள்ளைகள் பிறப்பதிலிருந்து வளரும் வரையில் கலைச்சுழலிலே வாழப்பழகிக் கொள்கின்றது.
பிரபல சங்கீத மேதையாக திகழ்ந்து இணுவிலுக்கு பெருமைதேடித்தந்த அமரர் ம.த.ந.வீரமணிஐயர் அவர்கள் இலங்கையில் மட்டுமல்லாது இந்தியா, மேற்குலக நாடுகள் என அவர் எமது மண்ணுக்கு பெருமை தேடித்தந்துள்ளார். இதே போல் பிரபல தவில் மேதையான அமரர் சின்னராசா அவர்களும் இணுவிலுக்கு பல பெருமைகளைக் கலைத்துறையிலே ஈட்டித்தந்துள்ளனர்.
இன்னும் எத்தனையோ சங்கீத வித்துவான்கள், வயலின், தவில், நாதஸ்வரம், வீணை, நடனம், சித்திரம் என பல்துறை விற்பன்னர்கள் வாழ்ந்தார்கள், வாழ்ந்து வருகின்றார்கள் இவர்களது தகவல்களையும் இவ் இணையத்தளமானது வருங்காலத்தில் இணைத்து இணுவிலின் தகவல்பொக்கிஷமாக திகழும் என்பதில் ஐயமில்லை.
எத்தனையோ பெரிய மகான்களும், கல்வி மான்களும், கவிஞர்களும், சிற்பாச்சாரியர்களும், நடன மேதைகளும், தவில் வித்துவான்களும், நாதஸ்வர வித்துவான்களும், பாடகர்களும் வாழும் ஒரு கலைப்பொக்கிஷமாக திகழும் ஒரு கிராமமாகும். இக்கிராமத்தின் மற்றுமொரு சிறப்பானது அதிகளவிலான கோயில்களைக் கொண்டிருந்து அதனூடாக இக்கலைகளை வளர்க்கக்கூடியதான பாக்கியம் கிடைக்கப்பெற்றதாகும். எல்லாவீட்டிலும் வாழும் சிறார்கள் முதல் பெரியவர்கள் வரையில் எதாவதொரு கலைத்துறையில் ஆர்வம் காட்டுபவர்களாகவே காணப்படுகின்றனர். எனவே பிள்ளைகள் பிறப்பதிலிருந்து வளரும் வரையில் கலைச்சுழலிலே வாழப்பழகிக் கொள்கின்றது.
பிரபல சங்கீத மேதையாக திகழ்ந்து இணுவிலுக்கு பெருமைதேடித்தந்த அமரர் ம.த.ந.வீரமணிஐயர் அவர்கள் இலங்கையில் மட்டுமல்லாது இந்தியா, மேற்குலக நாடுகள் என அவர் எமது மண்ணுக்கு பெருமை தேடித்தந்துள்ளார். இதே போல் பிரபல தவில் மேதையான அமரர் சின்னராசா அவர்களும் இணுவிலுக்கு பல பெருமைகளைக் கலைத்துறையிலே ஈட்டித்தந்துள்ளனர்.
இன்னும் எத்தனையோ சங்கீத வித்துவான்கள், வயலின், தவில், நாதஸ்வரம், வீணை, நடனம், சித்திரம் என பல்துறை விற்பன்னர்கள் வாழ்ந்தார்கள், வாழ்ந்து வருகின்றார்கள் இவர்களது தகவல்களையும் இவ் இணையத்தளமானது வருங்காலத்தில் இணைத்து இணுவிலின் தகவல்பொக்கிஷமாக திகழும் என்பதில் ஐயமில்லை.
இணுவில் வரலாறு
இணுவில் கிராமம் வரலாறு - பக்கம் 1
சிவபூமியாகிய ஈழத்திருநாட்டில் யாழ்ப்பாணத்திலே காங்கேசன்துறைப் பெருந்தெருவில் யாழ்நகரில் இருந்து 4முஅ தொடக்கம் 6முஅ வரையிலான பகுதியை உள்ளடக்கியதே இணுவையம்பதியாகும் . இதுசெந்தமிழும் சிவநெறியும் செழிந்துவாழும் ஊர் ஆகும். இதன்எல்லைகளாக கிழக்குஎல்லையாக உரும்பிராயும் வடக்குஎல்லையாக சுன்னாகமும் வடகிழக்குஎல்லையாக கல்லாக்கட்டுவனும் தென்கிழக்குஎல்லையாக கோண்டாவிலும் தெற்குஎல்லையாக தாவடியையும் மேற்குஎல்லையாக சுதுமலையையும் வடமேற்குஎல்லையாக உடுவிலையும் கொண்டு அமைவு பெற்றுள்ளது. இணுவையூரின் நிலப்பரப்பு ஏறக்குறைய 650 ஏக்கர் கொண்டதாகும் இதன்படஅமைவைக் கீழ்வரும் படம்காட்டுகிறது.
இணுவையம்பதியின்தொன்மைச்சிறப்பினை நோக்குகின்றபோது அந்தக்கவிவீரராகவன் யாழ்வாசித்துக் கவிபாடி யாழ்ப்பாணத்தைப்பரிசாகப் பெற்றிருந்தான். அவ்விடத்திலே தமிழ்நாட்டிலிருந்து ஏழு குடும்பங்களை வருவித்து குடியேற்றினான் அவர்கள் ஏழுகுடும்பங்களில் குடியமர்த்தப்பட்டவர்களில் அவற்றில் இணுவிலும்ஒன்றாகும். "இணுவில் எனின் இணையில்' என்பர். ஆய்வாளர் கள் இனணயில்லாத கிராமம் என்பது இதன்பொருளாகும் ஈடுஇணையற்ற புலவர்கலளயும் பாணர்கலளயும் நாதஸ்வர தவில் வயலின் வாத்தியத்தில் மேதைகளையும் நாடகத்துறையின் பெருங்கலைஞர்களையும் அண்ணாவிமார்களையும் பரம்பரை பரம்பரையாகக்கொண்ட பதி எனும் மகிமையினாலும இணையில்ஆயிற்று.
புகழ்புத்த சத்தர்களையும் ஞானிகளையும் ஆயுள்வேதவைத்தியர்களையும் கொண்டுமிளிர்தமையினாலும வ{பூதியின்மகிமையை என்றும் உணர்த்திநிpன்றபெருமையினாலும் ஒல்லாந்த போர்த்க்கேய ஆங்கிலேய அமெரிக்க பாதிரிமார்களின் பிரசாரங்களில் மயங்கிஒருவர்பார்த்க்கேய ஆங்கிலேய அமெரிக்க பாதிரிமார்களின் பிரசாரங்களில் மயங்கிஒருவர்கூட மதம்மாறாதமாண்பினாலும் நூற்றுக்கணக்காணஓதுவார்களின் கூட்டுபிரார்தனைகளாலும் இணுவில் நறுமணம் கமழ்வதாயிற்று.
சிறைகதவு பூட்டுஉடைய சிவகாமிஅம்மைமேல் தோத்திரம்பாடிய சின்னத்தம்பிபுலவரும் நாவலர்வழியில் உயர்தமிழ்ஆற்றிய தவத்திருநடராஐ ஐயரும் தமிழகத்தில்திருவாவடுதுறை ஆதியின வித்துவானாகவிளங்கிய தணிகைபுராணத்திற்கு உரைஎழுதிய அம்பிகைபாகரும் பிறந்தபூமியாதலினாலும் வி.தட்சனாமூர்த்தியையும் பார்போற்றும் தவில்மேதையாக லயஞர்னகுபேரபூபதியாக உருவாக்கிய கிராமமாகவும் பிடிஅரிசிதொண்டினமூலம் இராசகோபுரம் அமைத்தபணியினாலும் இணையில்பாராட்டுவதற்குள்ளாயிற்று. பெரிய கோவில் என வரலாற்றில் இடம்பெற்றுள்ள நொச்சியம்பதியின் உலகபெருமஞ்சத்தினாலும ; இணுவில் மண்ணை ஆண்மீகவாதிகள் திருமண்என்றே கூறுவர்.மேலும் கல்விமான்களும் எழுத்தாளர்களும் கவிஞர்களும்இணுவிலுக்கு அணிசேர்க்கின்றனர்.
இணுவில் கிராமம் வரலாறு - பக்கம் 2
சமயரிதியாக எம்இணுவையம்பதியை நோக்கும்போது " திருக்கோயில் இல்லாத திருவிலூரும்" என்பது அப்பர் தேவாரம் "கோயில் இல்லாத ஊரில் குடியிருக்கவேண்டாம்" என்பது மூதுரை தமிழர் வாழ்வில் திருக்கோயில்களே சிறந்த செல்வமாக மதிக்கப்பட்டன அத்தகய கோயில்கள்நிறைந்தவை இணுவை அந்தவகையிலே கிழக்கிலே சிவகாமி அம்மை ஆலயம் விசாலாச்சி சமேத விஸ்வநாதர் ஆலயம் (காரைக்கால்)எலலையில் கருணாகரபிள்ளையார் ஆலயம் மத்தியில் அருணகிரிநாத சிவசுப்பிரமணியர் ஆலயம்(மஞ்சத்தடி)குருக்கள் சிவன் கோவிலும் பரமானந்தவல்லி அம்பாள் ஆலயமும் தெற்கில் ஸ்ரீபரராஜசேகரப்பிள்ளையார் ஆலயமும் நடுவிளாத்தி ஞானவைரவர் ஆலயமும் மேற்கில் நெச்சியெல்லைக்கந்தன்ஆலயம் ஸ்ரீசேராஜசேகரப்பிள்ளையார் ஆலயம் எலலையிலே கற்பகப்பிள்ளையார் ஆலயம் வடக்கில் வட்டிவினிப்பிள்ளையார் கண்ணகி அம்மன்கோவில் எல்லையில் பல்லப்பவைரவர்கோயிலுமாக நாற்புறமும் தெய்வமணங்கமளும் தொல்பதி இணுவையம்பதியாகும் .
தென்இணுவையம்பதி அமர்ந்து தெய்வீகஅருள்சுரந்து என்றவரிகள பரராஜசேகரவிநாயகனின் பெரமையை எடுத்துகூறுகிறது பண்டுதொட்டு பைந்தமிழும் திவ்வியமும் பழுத்தசைவநெறியும்போற்றிவருகின்ற இடமாக இணுவையம்மதி விளங்குகிறது. இவ்இணுவையம்பதியிலேஎழுந்தருளியிருக்கின்ற இவ்அலயம் இறைவனை பிரார்த்திக்கின்ற இடமாக அல்லாமல் வழிபாட்டோடுவாழ்வை வளம்படுத்தும் வகையிலும் செயற்படும் இடமாகவே இவ்ஆலயம்விளங்குகிறது. சமுதாயத்தை மேம்படுத்தும்நோக்கிலேயே இற்றைவரை அவஆலயம் செயற்பட்டுவருகிறது. ஏம்இணுவில்சமுதாயத்தைஇற்றைவரை காலமுமு: சுமூகNசுவையில:ஈடுபடுத:தி சமூகவளத:தைபெரக:கியநிலையில:இவ் ஆலயபணிமகத்தானது. முதலில் இவ்ஆலயத்தின் புர்வீகவரலாற்றை பற்றி அறிகின்றபோது ஈழத்தில்உடுவில் கோவில்பற்றைமுற்றுகையிட்ட போர்த்க்கேயர் இணுவில் என்னும் புர்வீககிராமத்து பரராஜசேகரப்பிளளையார் கோவிலைநிலைகுலையச்செய்தார்கள. ஆரசபரம்பரையில் பராமரிக்கப்பட்டஇக்கோயிலைபாதுகாக்கஎண்ணி இத்தலத்தை மடமென்றுவாதாடி ஓரளவிற்கு பாதுகாத்தனர் என்றுகர்ணபரமபரை ஒன்று கூறுகிறது . பாயிற்பக்கத்தில் மடம்அமைந்துஇருந்தமையினால் இக்கோயிலை மடத்துவாசல் பிள்ளையார் கோயில்என்றும் வழங்கலாயினர் கி.பி1475ல் சிங்கைபரராஜசேகரன்அரசனானபோது நல்லுர் ராசதானிசிறப்புறஅமைக்கப்பட்டதாகவும் நல்லூர்நகர் நாறறிசையிலும் நான்கு கோயில்அமைக்கப்பட்டதாகவும் இவனது காலத்தில் அரசகேசரியால்நீர்வேலியில் பிள்ளையார்கோயில் கட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது. (இவையாழ்ப்பாணமாலையில் காணப்படுகிறது)இவைஅனைத்தையும்நோக்மிடத்துஅக்காலத்தில் நீடித்துநிலைத்திருந்தஇணுவையம்பதிக்கோயில்பரராஜசேகரன் சகாப்தத்தில் அரசனது செல்வாக்கையும் ஆதரவையும்பெற்று அரசனதுநாமம்சூட்டபட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.இக்கோயில்மூலமூர்த்தியாக எழுந்தருளியிருக்கும் இறைவன்விநாயகப்பெருமானது திருஉருவம் தமிழகத்து சிற்பவிற்பன்னர்களால் அமைக்கப்பட்டு இங்கு கொண்டுவரப்பட்டது என்று கூறப்படுகிறது.இக்காலத்திற்கு தொண்டை நாட்டில் இருந்து பலசான்றோர்கள் வந்து குடீயேறி வாழ்ந்தமைக்கும்போதிய சாண்றுகள்உண்டு.
இத்தகய சிறப்புகள் பெற்ற இத்தலம் சமயவளர்சியில் கொண்டுள்ள முக்பியத்துவத்தினை ஆராய்கின்றபோது இத்தலத்தை அண்மித்துவாழ்ந்த சாணறோர்கள்பலர் சித்தாந்த சாஸ்திரங்களுள்பார்விரித்தநூல்களிலேசிறப்பாக உள்ளசிவஞானசித்தியாருக்கு எழுந்தஉரையமுதத்தைநுற்றருப்பத்தைந்து ஆண்டுகளிற்கு முன்அச்சிட்டுவெளியிட்டவரும் இணுவையம்பதியைச்சேர்ந்த சாண்றோரேஎன்றால் அதுமிகையாகாதுஅந்தவகையில் பல சாண்றோர்களைஇவ்ஆலயம் உருவாக்கியுள்ளது இந்த பண்பாட்டுவளர்சியில் கலைகள்முக்கியஇடத்தை பெறுகிறது.இவவகையில் கலைகளை வளர்த்இடமாகவும் இவ்ஆலயம் சிறப்பிடம்பெறுகிறுது.கட்டிடக்கலையின் சிறப்பை கோயில்அமைப்பு முறைகளிலும் சிற்பக்கலையின்விறப்பை பிரமாண்டமாய் அமைந்தகோபுரத்தில் அமைந்தசிற்பங்கள்மூலமும் ஓவியக்கலையின் சிறப்பை உள்சுற்றுபரகாரத்தில் சுவரில் வரையப்பட்டுள்ளவர்ணஓவியங்களும் எடுத்துகாட்டுகின்றன.இசைக்கலையும் இவ்ஆலயத்தை மையமாககொணடுவளர்ந்துள்ளது.
இவ்ஆலயத்தில்மகோற்சவம';பன்னிரண்டுதினங்கள்
நடைபெறுகிறது.இந்த நாட்களில் ஊரே விழாக்கோலம் கொண்டதாக காணப்படும்கோயில் சூழல் கிராமச்சூழல் துப்பரவுசெய';யப்பட்டுதுPPர்ய்னமயான இடமாககாணப்படுகிறது
அத்துடன் கோயிலின் உற்சவகாலங களில்அடியார்கள்அங்கப்பிரதட்சணம் செய்தல் அடியடித்தல்என்பனசிறப்பாகஇடம்பெறுகிறது மேலும் இவ்வாலயத்தில்விநாயகசஷ்டிபிள்ளையார்பெரும்கதை போன்றவையும்சிறப்பாககொண்டாடப்படுகிறது: இவ்ஆலயத்தில்சமயவளர்ச்;சிக்கா சமுதாயத்;தினர்பயன்பெறும்நோக்கில் உற்சவகாலங்களில்சமயப்பெரியார்கள் வரவழைக்கப்பட்டு சமயசொற்பொழிவுகள் நடைபெற்றுவருகின்றன இதன் மூலம் மக்களிடையே சமய உணர்வு வளர்க்கப்படுகிறது. திருநெறிய தமிழ் மறைக்கழகம் கோயிலை மையமாக வைத்து இயங்குகின்றது. இக்கழகமானது நாயன்மார்களது குருபூசை தினங்களை சிறப்பாக கொண்டாடுவதன் மூலமும் இத்தைகைய காலங்களில் பெரியார்கள் வரவழைக்கப்பட்டு நாயன்மார்கள் பெருமை மக்களுக்கு எடுத்தியம்பப்படுகிறது. மேலும் மக்களிடையே சமய அறிவை வளர்க்கின்ற நோக்கில் சமய அறிவுப்போட்டி, பண்ணிசைப்போட்டி, பேச்சுப்போட்டி என்பவற்றை நடாத்தி பரிசில்களை வெற்றிபெற்றவர்களுக்கு வழங்;கி வருகின்றனா.; மேலும் விநாயக சஷ்டி, கந்த சஷ்டி, காலங்களில் இலவச விநாயகர அகவல், கந்த சஷ்டி கவசம் போன்ற நூல்களை வழங்கி மக்களிடையே பக்தியுணர்வு வளர்க்கப்படுகிறது. இ;வ்வூர் மக்களால் விநாயகர்சதுர்த்தி சிறப்பாக அனுஷ்டிக்ப்படுகிறது. மேலும் மக்களிடையே திருமுறை ஓதும் மரபை இக்கழகம் செய்து வருகிறது. வெள்ளிக்கிழமைகளிலும் உற்சவ காலங்களிலும் சுவாமிக்கு பின்னால் திருமுறை ஓதும் மரபு காணப்படுகிறது. இதன்மூலம் இளைஞர்களிடைNயு சமய உணர்வு வளர்கப்படுகிறது.
மேலும் இவ் ஆலயத்தை மையமாகக் கொண்டு மக்களுடைய வாழ்வு வளம்படுத்தப்படுகிறது. கோயிற் தொண்டுகளை செய்ய ஊழியர்கள் சிலர் நியமிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் இவ் ஆலயத்திற்கு தேவையான பூமாலைகள் பூச்செண்டுகள் போன்றவற்றை செய்கின்ற பூமாலைத் தெண்டு செய்பவர்களுக்கு உதவுவதன் மூலமும் வேலை வாய்ப்பை ஓரளவு மக்களுக்கு வழங்குகின்றது. மேலும் இணுவில் பொதுநூலகமும் உற்சவகாலத்தில் தண்ணீர்ப்பந்தல் அமத்து தாக சாந்தி செய்வதும் மருதடி உற்சவ காலங்களிலும்; இக்கோயிலின் அருகாமையி;ல் தண்ணீர்பந்தல் அமைக்கப்பட்:டு மக்களுக்கு அதாவது தூர இடங்களிலிருந்து வரும் மக்களுக்காக தாக சாந்தி அளிக்கப்படுகிறது. அத்துடன் மக்களிடையே காணப்படும் பசிப்பிணியை போக்க தானங்கிளில் சிறந்த தானமான அன்னதானம் அளிக்கப்படுகிறது. தேர்த்திருவிழாகாலங்களிலும் அன்னதானம் வழங்கப்படுகிறது. இதன்மூலம் மக்களிடையே சமுதாய சேவையை திறம்பட ஆற்றி வருகிறது.
மேலும் ஊர் நன்மைக்காகவும் எம் ஈழ நன்மைக்காகவும் பல்வேறு யாகங்கள், அர்ச்சனைகள் இத்தலத்தில் இடம்பெற்று வருகிறது. இத்தலத்தின் பெருமைகளையும் மூர்த்தி பேதங்களின் சிறப்பையும் பல நூல்கள் எடுத்தியம்புவதன்மூலம் இத்தலம் பெருமை அடைகிறது. பஞ்சமுக விநாயகர் திருவூஞ்சல் பஞ்சமுகவிநாயகர் பெருமையை கூறுகிறது. இது கதிர்காமநாதனால் ஆக்கப்பட்டது. பிள்ளையார் கதை, விநாயகர்; அகவல் இதுவும் இணுவையூர் கதிர்காமநாதனால் ஆக்கப்பட்டது. மேலும் ஸ்ரீ பரராஜசேகரப்பிள்ளையார் பிரபந்தங்கள் என்ற நூலும் இத்தலத்தினதும் திருவுருவங்களினதும் சிறப்பினை எடுத்தியம்புகின்றது. 1997ம் ஆண்டு நடைபெற்ற கும்பாபிஷேக காலத்தின்போது ஒலிநாடா வெளியிடப்பட்டது. இது இணுவை பிம்மஸ்ரீ வீரமணி ஐயராலும் சுசீலாவாலும் இயற்றப்பட்டு ரமணியின் இசையமைப்பில் தென் இந்திய பாடகாரான மசேவியா வாசுதேவனால் பாடப்பட்டதாகும்.
இப்பாடல்கள் உள்ளத்தை உருக்கும் பாடல்களாகவும் மக்களிடையே பக்தியுணர்வை மேலும் வலுப்பெநச்செய்யும் வகையிலும் உதவிபுரிந்துள்ளன. 'உண்ணாமல் இருப்பேன் உறங்காமால் இருப்பேன்' என்ற வரிகள் உதாரணத்திற்கு போதுமானதாகும்.
இணுவில் கந்தசாமி கோயிலின் பூர்வீக வரலாற்றை நோக்கும்போது இணுவையின் வாழ்விற்கு பெரிய சன்னியாசியார் செய்;த பணிகள் அளப்பெரியன. அடிகளார் வாழ்வு தவத்தில் மகி;ழ்ந்தது. அம்மகிழ்வு மணம்பரப்பியபோது அம்மணத்தால் ஈர்க்ப்பட்டு வந்த சான்றோராகும். கலைஞர்களும் இணுவை மண்ணைத் திருத்தவமாக் கொண்டனர். அதனால் சைவமும் தமிழும் இணவையில் மலர்ச்சி பெற்றன. ஆடிகளால் இணுவில் கந்தசாமி கோயில் பெரும் புகழும் சிறப்புபும் பெற்றது. ஈழத்திருநாட்டில் உள்ள அறுபடை வீடுகளில்; ஒன்றாகக் கந்தாமி கோயிலும் இடம்பெற்றுள்ளது. மாவிட்டபுரம், செல்வசந்நிதி, கந்தவனக்கடவை, நல்லூர், கதிர்காமம் என்பன ஈழநாட்டின் அறுபடைவீடுகளாகும். இதனை குலசபா நாதன் தமது கட்டுரை மூலம் குறிப்பிட்டுள்ளார்.
அருட்பெருமையும்(மூர்த்தி) கோயிற்சிறப்பு(தலம்), திருநீர்ப்பெருமையும்(தீர்த்தம்), இணுவையூர்க்கந்தன் ஞானவைரவனாகாத்தோன்றிய பேரின்பம் நல்கும் திற்த்தினை விளக்கும்மாற்றால் அவனால்தான் இயலும் இதனை உணாந்து உறுதிப்படுத்தியவரே இணுவையூர் சந்நியாசியார் கோயில் கொண்ட இறைவனை சாந்தியடியான், விளாத்தியடியான், எனப் பல பெயர் கொண்டழைப்பர். இக்கோயிலின் நேர்வாசாலில் திரு நீர்நிலையொன்று உள்ளது. தீராத வினைகளைத் தீர்க்கும் பேராற்றல் வாய்ந்தது. இரவு,பகல் என்றுபராது அடியார்கள் நாள்தோறும் நீராடுவதனை இங்கு காணலாம். ஆடஷதன் பயனை இன்று அனுபவித்து வருகின்றார்கள்.
இணுவைக்கந்தன் ஆலயமானது அன்றுதொடக்கம் இன்;று வரை ஊர் அன்பர்களாலும் அயலூர் அன்பர்களாலும் வழங்கப்பெற்ற நன்கொடைகளால் ஆலயம் இனறு தலை நிமிர்ந்து நிற்கும் அளவிற்கு அழகிய கலை அம்சம் நிறைந்த வாயிற்கோபுரமும் அதன் அருகில் நாத ஒலி எழுப்பும் இரணடு மணிக்கூட்டுக்கோபுரமும் அதனை அடுத்த மணிமண்டபமும் அது மட்டுமல்லாது முன்னவர்களின் அயராத முயற்சியால் உருhவாக்கப்பட்ட உலகப்பெருமஞ்சமும் இக்கோயிலுக்கு மேன்மேலும் அணிசேர்க்கின்றன. இதைஆக்கிய பெருமை சன்னியாசியாரைச்சாரும். இந்த மஞ்சம் இணவைக்கந்தனுக்கு மட்டுமே உரித்துடையதன்று தமிழ்பேசும் நல்லுலகிற்கே சொந்தமானது. இம்மஞ்சமானது திராவிட சிற்பக் கலையின் உறைவிடமாய் அமைந்துள்ளது. இலங்கை இந்திய கலாசாரத் தொடர்பிற்கு எடுத்துக்காட்டாக அமைவது பண்பாடும் கைவண்ணமும் நிறைந்த இந்திய திராவிடச் சிற்பங்களின் கலைத்திறனையும்
இணுவில் கந்தசுவாமி கோவிலில் உள்ள கடாவாகனம் உயிரோவியமாக அமைந்துள்ளது. இதன் கொம்புகள் இயற்கை அமைப்பினைப் பெற்றுள்ளது. சிறந்த சிற்பக்கலைக்கு உறைவிடமாக இருக்கும் தகுதி இதற்கு உண்டு. இக்கோயிலலில் உள்ள ஆறுமுகக் கடவுளின் திருவுருவ அமைப்பும் சூரனின் உருவ அமைப்பும் மிகச் சிறப்புடன் அமைவு பெற்றுள்ளன. இவ்வாறு பல சிறப்புகளைக் கொண்டு காணப்படும் இவ்வாலயம் சமய வளர்ச்சிகளைக் கொண்டு காணப்படும். இவ்வாலயம் சமய வளர்ச்சிக்கும் வாழ்வதற்கும் உறைவிடமாக அமைந்துள்ளது. இங்கு விஷேட தினங்களாக ஆலய மகோற்சவமும் கந்தசஷ்டியும் அமைந்துள்ளது.
ஆலயத்திற்கு அப்பால் சமயத்தை வளர்க்கும் நிறுவனமாக இளந்தொண்டர் சபை காணப்படுகின்றது. இந்தத நிறுவனம் மகோற்சவ காலங்களில் ஆண்டுதோறும் சமய அறிவுப் போட்டிகளை நடாத்தி அதிலல் வெற்றி பெறுபவர்களுக்கு சிறந்த பரிசில்களை வழங்கி வருகின்றது. இது மட்டுமல்லாது பல புராணக் கதைகளை மேடையேற்றி வருகின்றது. இந்தவாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் சமய தீட்ஷை பெற்றிருக்க வேண்டும். இப்பணியை செவ்வனே நிறைவேற்ற வருடத்தில் இரு தடவைகள் தீட்னவி கொடுக்கும் பணணியைச் செய்து வருகின்றது. மற்றும் மகோற்சவ காலங்களில் பண்ணிசைபாடும் மரபையும் பேணி சமய வளர்ச்சிக்கு உறுதுணை புரிகின்றது.
சமய ரீதியில் ஆத்மீகத் துறையில் வாழ்ந்த அருள் ஒளி பரப்பி ஞான வாழ்க்கைக்குரிய முத்திரை பதித்த சாதுக்களையும் தபோதனர்களையும் இவ்வூர் தன்னகத்தே கொண்டது. அந்த வகையில் இணுவில் தந்த ஞான பழமாகவும் நல்ல குருசாதனாகவும் வாழ்ந்து மக்கள் மத்தியில் உள்ளத் தெளிவை ஏற்படுத்தியவர் வடிவேற் சுவாமிகள் இவருடைய அருள் வெளிக்காட்டலினால் ஆயிரம் ஆயிரம் உள்ளங்கள் தெளிவு பெற்றன. இவருடன் பெரிய சன்னாசியாரும் ஊர் மக்களை நல்வழிப்படுத்தி சிறந்த சித்தராக மிளிர்ந்தனர்.
நிறைவாக சமயய ரீதியில் வளர்ச்சிக்கும் அதனோடு இணைந்த சித்தர்களின் தோற்றமும் சமய வழிகாட்டல்களுக்கு அடிப்படையாக அமைந்தன. அடிகளாரின் அருட்திறனையும் எடுத்து விளக்குவதே இணுவை மஞ்சம் இன்றுவரை தன்னிலை தெரியாது கலையழகோடு திகழ்வதற்கு அவையே ஏதுவாகும். இம் மஞ்சம் நாற்படிக்கு மேற்பட்ட உயரமுடையது. தத்துவ உண்மையினை விளக்குவது மட்டுமல்லாது கலை புலவர்களாலும் வெளிநாட்டு நல்லறிஞர்களாலும் வியந்து போற்றுதற்குரியது. மஞ்சத்திற்கு ஆயிரம் மணிகளையும் ஆய்ரம் சதங்கைகளையும் முகமதியப் பெரியார் செய்யது என்பவர் அறநன்கொடையாகக் கொடு;த்தார்.
இணுவில் கிராமம் வரலாறு - பக்கம் 3
இணுவில் கிராமத்தின் சமூக அபிவிருத்தி ஆனது பன்முகப்படுத்தப்பட்ட அம்சங்களின் கூட்டு வளர்ச்சியால் தோன்றியது எனலாம். இவ்வகையில் புவியியல், பொருளாதார சமூக காரணிகள் இவ் அபிவிருத்திக்கு அடிப்படையாக அமைகிறன. சமூக அபிவிருத்திப் பின்னனி பற்றி நோக்குகையில்.
சிறுகைத் தொழில்கள் விவசாயம் போன்ற பொருளாதார நடவடிக்கைகள் அபிவிருத்தி அடையும் போது சமுதாயத்தில் ஒற்றுமை, சமூக வேறுபாடு காட்டாமை, நிறுவன மயப்படுத்தல் போன்ற அம்சங்களில் சமூகத்தில் அபிவிருத்தி ஏற்படுகிறது. இச் சமூகம் ஒரு மனப்பான்மை பெற்றதாக சமூக பொருளாதார, கலாச்சார தொடர்பியல் அம்சங்களில் தம்மிடையே ஒருமைப்பாட்டைக் கொண்டு இருப்பதுடன் சூழவுள்ள ஏனைய சமூகத்திலிருந்து ஓரளவு வேறுபாடுகளைக் கொண்டனவாக அமை;ந்துள்ளது.
இணுவில் கிராமமானது வலி தெற்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவில் அமைந்துள்ளது. இது 4 கிராம அலுவர் பிரிவுகளை உள்ளடக்கி உள்ளது. அவையாவன J/188, J/190, J/191 என்பனவாகும். இதில் நாம் J/188, J/191 ஆகிய பிரிவுகளை விரிவாய் நோக்குவோம்.
இணுவில் கிராமமானது யாழ் நகரிலிருந்து வடக்கே 4 மைல் தொலைவிலும் காங்கேசன் துறையிலிருந்து தெற்கே 8 மைல் தொலைவிலும் அமைந்துள்ளது. மேலும் யாழ்ப்பாணத்திலிருந்து காங்கேசன்துறை நோக்கி செல்லும் மத்திய நெடுச்சாலை இணுவில் ஊடாகச் செல்வதால் போக்குவரத்திற்கும் இவ்வூர் வசதியாய் அமைந்திருக்கிறது.
இக்கிராமத்தின் புவியியல் பின்னனியை நோக்குகையில் தரைத் தோற்றத்தினை எடுத்துக் கொண்டால் எங்கும் சமதரையும் மயோசின் காலத்து சுண்ணக் கற்பாறைகளைக் கொண்டதாகவும் காணப்படுகின்றது. காலநிலையை எடுத்துக் கொண்டால் வடகீழ்ப் பருவப் பெயச்சிக் காற்றினாலும், சூறாவளியாலும் இக்கிராமம் ஐப்பசி, கார்த்திகை, மார்கழி மாதங்களில் மழைப் பெறுகின்றது. ஏனைய காலங்களில் வரட்சியாகவே இருக்கும் வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி மாதங்களில் வரட்சி கூடியதாக இருக்கும். இக்காலத்திற் கோடைக் காற்று வீசும்.
வரட்சிப் பருவம் கூடியதாய் இருப்பதால் வரட்சியைத் தாங்கக் கூடிய இயற்கைத் தாவரங்களே காணப்படுகின்றன. பனை, கள்ளிமரங்கபள், பற்றைக்காடுகள் காணப்படுகின்றன. இன்று பனையைத் தவிர ஏனைய இயற்கைத் தாவரங்களிற் பெரும்பாலனவை அழிக்கப்பட்டு விட்டன. பனை மரங்களும் தொகையில் மிகவும் குறைந்து செல்வதைக் காணலாம். இதைத் தவிர நீர் இறைக்கும் பம்பிகளின் அறிமுகத்தைத் தொடர்ந்து இக்கிராமங்களின் வீடுகளில் மா, பலா, வாழை போனற சுவைதரும் கனி மரங்களும் தென்னை, கமுகு, வேம்பு போன்ற மரங்களும் அதிகளவிற் காணப்படுகின்றன.
இணுவில் கிராமமானது யாழ்குடாநாட்டின் வளமான பிரதேசமான செம்மண் பிரதேசத்தில் காணப்படுகின்றது. இங்கு செம்மண் பிரதேசமாகவிருந்த போதிலும் இடை இடையே கற்பாறைகளும் காணப்படுகின்றன. இன்று இவை படிப்படியாய் அகழ்ந்து எடுக்கப்பட்டு பசளைகளிடப்பட்டு விவசாய நிலங்களாக மாற்றப்பட்டு வருவதைக் காணக் கூடியதாக உள்ளது.
நீர்வளத்தினை எடுத்துக் கொண்டால் ஆரம்ப காலத்தில் மழைநீர் குளங்களில் சேகரிக்கப்பட்டதாகவும் அவை விவசாயத்திற்கு பயன்பட்டதாகவும் அறியப்படுகிறது. இன்றும் குளக்கரை என்றற பகுதிக்கருகில் நெல் வேளாண்மை செய்யப்படுவதைக் காணக்கூடியதாய் இருக்கிறது. சுண்ணாம்பு பிரதேசங்களிற் தரைகீழ் நீர் காணப்படுகிறது. இப்பிரதேசத்திற் பெய்யும் மழை நிலத்தினு;டாக சென்று நிலக்கீழ் நீராக தேங்கிக் காணப்படுகின்றது.. இந்நீரை மக்கள் கிணறுகள், குழாய்க் கிணறுகள் மூலம் பெற்று வீட்டு தேவைக்கும் விவசாய தேவைக்கும் பயன்படுத்துகின்றனர்.
பொருளாதார பின்னனியை எடுத்து நோக்கும் போது இக்கிராமத்தின் பொருளாதாரத்தின் உயிர்நாடியாக விளங்குவது விவசாயமாகும். இக்கிராமத்தின் பெரும்பான்மை நிலப்பகுதி (J/191) விவசாய நிலங்களாகவும் வீட்டுத் தோட்டங்களாகவும் காணப்படுகின்றது. இக்கிராமமானது செம்மண் பிரதேசமாகவும் தண்ணீர் வளம் கொண்டதாகவும் காணப்படுவதே விவசாயத்திற் தங்கியிருக்க முக்கிய காரணமாயிற்று. விவசாயத்தை வாழ்க்கை தொழிலாகக் கொண்ட இவ்வூரில் எந்நாளும் பசுமையையே காணமுடிகிறது. கறவைப் பசுக்களும், ஆடுகளும் இவ்வூரவர்களின் கால்நடைச் செல்வங்களாகும். இம் மண்ணில் எப்பயிரும் செழித்து வளரும் மா, பலா, தென்னை, கமுகு, வாழை முதலிய உயர் மரங்களும் சாமை, குரக்கன், பயறு முதலிய தானிய வகைகளும் மரவள்ளி, கறனை, இராசவள்ளி, கொடிவள்ளி, உருளைக்கிழங்கு முதலிய கிழங்கு வகைகளும் வெண்டி, தக்காளி, கத்தரி, மிளகாய் முதலிய காய்கறிகளும் இவ்வூரில் விவசாயப் பயிர்களாகக் காணப்படுகின்றன. இதனால் இங்கு விளைவிக்கும் பொருட்களை விற்பளை செய்வவதற்கான நானங்காடி (இணுவில் சந்தை) இவ்வு|+ரிற் பல காலமாய் இருந்து வருவதைக் காணலாம். இன்று புகையிலை, வெங்காயம், மிளகாய் போன்ற பயிர்கள் வருமானத்தை ஈட்டித் தரும் பயிர்களாய் அதாவது பணப்பயிர்களாய் வளர்க்கப்படுகின்றன. இவை இலங்கையின் ஏனைய பகுதிகட்கு குறிப்பாக தென்பகுதிகட்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருவதைக் காணக்கூடியதாயுள்ளது.
இவை தவிர இக்கிராமத்தின் பொருளாதாரத்தில் சிறு கைத்தொழில் முயற்சிகளும் முக்கியம் பெறுகின்றன. இவை இக்கிராமத்தின் மக்களுக்கு தொழில் வழங்கும் ஸ்தாபனமாக காணப்படுவதை அவதானிக்கலாம். இவ்வகையில் புகையிலையை மூலப் பொருளாகக் கொண்ட சுருட்டு கைத்தொழில் வீடுகள் எங்கும் பரவலாக காணப்படுகிறது. இவை பெரும்பாலும் வெளிமாகாணங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஆனால் இன்று கைத்தொழில் யுத்த சூழ்நிலைகள் இடப்பெயர்வுகள் போன்ற காரணங்களால் பாதிப்புற்ற நிலையில் அங்கு ஒன்றும் இங்கு ஒன்றுமாக காணப்படுகின்றது. இது தவிர ஆரம்ப காலங்களில் பருத்தி நெசவுத் தொழில்கள் சிறப்பாக இணுவில் கந்தசுவாமி கோயிலுக்கு அருகிலும், இணுவில் மஞ்சடித்தடி அம்பலவாணர் கந்தசுவாமி கோயிலுக்கு அண்மையிலும் அமைந்து காணப்பட்டன. இது தவிர நவீன இயந்திரங்களின் உதவியுடன் துணி நெய்யும் "பவலூம்" தொழிற்சாலைகளும் அமைந்திருப்பதைக் காண முடிகிறது.
மேலும் இங்கு அமைந்த அண்ணா தொழிற்சாலை அப்பளம், ஊதுபத்தி, இனிப்புக்கள், மாவகை (உழுந்து, பயறு, கடலை, அரிசி) மற்றும் பல்வேறு உற்பத்திகளை மேற்கொண்டு வருகின்றது. இதுவே ஆரம்ப சிறுதொழிலாக ஆரம்பிக்கப்பட்டு இன்று பெரியளவில் வளர்ச்சியடைந்துள்ளது. இதன் கிளைகள் இணுவில் ஆஸ்பத்திரிக்கு அருகாமையிலும் உரும்பிராய் வீதியிலும் அமைந்துள்ளதைக் காணலாம். இக்கிராம மக்கள் பெரும்பான்மையோருக்கு வேலை வாய்ப்பை வழங்கும் நிறுவனமாக காணப்படுகிறது. இவை தவிர ஆங்காங்கே அரிசி ஆலைகள், புடவை (காமென்ஸ்) என்பன அமைந்து மக்களுக்கு தொழிலை வழங்கிவருவதைக் காணமுடிகிறது.
இக்கிராம வளர்ச்சிக்குரிய சமூக காரணிகளாக
1. கூட்டுறவு மனப்பாங்கு
2. அமைதியான பாதுகாப்பான சூழல்
3. தொழில் நுட்பவிருத்தி
ஆகியன குறிப்பிடலாம். நிரமந்தரமாக கிராமிய வளர்ச்சிக்கு எப்பிதேசத்திலும் உள்ளுரிலும் சுற்றுப்புற சூழலிலும் அமைதி நிலவுதல் வேண்டும். இவ்வகை கூட்டுறவு மனப்பாங்கு என்பது இங்கு மிகவும் விரும்பத்தக்க ஒன்றாக காணப்படுகிறது. இங்கு சாதி வேறுபாடு காட்டாது வேற்றுமையில் ஒற்றுமை கொண்டு மக்கள் வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இவ்வகையில் கோயிலும் இணுவில் கிராம மக்களின் வாழ்க்கையும் பின்னனிப் பிணைந்த ஒன்றாக காணப்படுகிறது. இதுமட்டுமன்றி கோயில் வேலை செய்யம் இளைஞர்கள் கூட்டுறவு மனப்பாண்மையுடன் கோயிற் தொண்டுகள் செய்து வருவதைக் காணலாம். இத்தொண்டு செய்யும் இளைஞர்கள் இணுவிற் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் இவர்கள் கூட்டுறவு மனப்பாங்குடன் தங்களுக்குள் ஒற்றுமையுடன் கூட்டுதல், கழுவுதல், சுவாமிகாவுதல் போன்ற பணியில் ஈடுபடுவதைக் காண முடிகிறது.
இங்குள்ள பொதுநூலகத்தை எடுத்துக் கொண்டால் நூலக அங்கத்தினர் கூட்டுறவு மனப்பாங்குடன் சமூக வளர்ச்சிக்கு அருந்தொண்டாற்றி வருகின்றனர். தொழில்நுட்ப ரீதியில் கணனிக் கல்வியை வழங்கியும் சமூகத்தில் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்க வாசிப்பு பகுதியையம் மற்றும் உள்ளக வெளியக விளையாட்டுக்களையும் மகோற்சவ காலங்களில் தாகசாந்தி நிறுவனமாகவும் நூல்கள் யாவற்றையும் வெளியிட்டு நூல் ஆசிரியர்களை ஊக்கப்படுத்தியும் மக்களுக்கு இலவச கருத்தரங்குகள் என சமூக சம்பந்தமாக மேற்கொண்டு வருகிறது.
கிராம குழுக்கள் வளர்ச்சியடைய கூட்டுறவு அம்சம் இன்றியமையாதது. கிராமங்களில் ஒருவரொடு ஒருவர் நெருக்கமாக இணையும் பண்பு காணப்படுகிறது. வளத்தை துப்பிரயோகம் செய்யாதிருத்தல் சுகாதாரம் பேணுதல் பொதுச் சொத்தை மூடிப் பேணல் கிராமிய கல்வி வளர்ச்சி மேம்பாடு என்பனவற்றுக்கு கூட்டுறவு அம்சம் இனறியமையாததாக உள்ளது. இவ்வாறு செயற்படும் ஓர் கிராமிய குழுவாக இணுவில் பொதுநூலகம் செயற்படுகிறது.
பொதுவாக அபிவிருத்தி எண்ணக்கருவில் உள்ளடக்கப்படும் அணைத்து அம்சங்களையும் எமது ஊர் சமூகத்தினையே வளர்ச்சி பெற்றுள்ளதை நன்கு அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இந்த வகையில் இயற்கையாக கிடைக்கும் மூலவளங்களைப் பயன்படுத்தி விவசாயம், சிறுகைத்தொழில் இவற்றின் மூலம் கைத்தொழில் வளர்ச்சி மற்றும் சந்தை வாய்ப்புக்கள், போக்குவரத்து வசதிகள், இவை எல்லாவற்றிக்கும் சிகரம் வைத்தால் போல் கல்வி அறிவுள்ள சமுதாயமே
சிவபூமியாகிய ஈழத்திருநாட்டில் யாழ்ப்பாணத்திலே காங்கேசன்துறைப் பெருந்தெருவில் யாழ்நகரில் இருந்து 4முஅ தொடக்கம் 6முஅ வரையிலான பகுதியை உள்ளடக்கியதே இணுவையம்பதியாகும் . இதுசெந்தமிழும் சிவநெறியும் செழிந்துவாழும் ஊர் ஆகும். இதன்எல்லைகளாக கிழக்குஎல்லையாக உரும்பிராயும் வடக்குஎல்லையாக சுன்னாகமும் வடகிழக்குஎல்லையாக கல்லாக்கட்டுவனும் தென்கிழக்குஎல்லையாக கோண்டாவிலும் தெற்குஎல்லையாக தாவடியையும் மேற்குஎல்லையாக சுதுமலையையும் வடமேற்குஎல்லையாக உடுவிலையும் கொண்டு அமைவு பெற்றுள்ளது. இணுவையூரின் நிலப்பரப்பு ஏறக்குறைய 650 ஏக்கர் கொண்டதாகும் இதன்படஅமைவைக் கீழ்வரும் படம்காட்டுகிறது.
இணுவையம்பதியின்தொன்மைச்சிறப்பினை நோக்குகின்றபோது அந்தக்கவிவீரராகவன் யாழ்வாசித்துக் கவிபாடி யாழ்ப்பாணத்தைப்பரிசாகப் பெற்றிருந்தான். அவ்விடத்திலே தமிழ்நாட்டிலிருந்து ஏழு குடும்பங்களை வருவித்து குடியேற்றினான் அவர்கள் ஏழுகுடும்பங்களில் குடியமர்த்தப்பட்டவர்களில் அவற்றில் இணுவிலும்ஒன்றாகும். "இணுவில் எனின் இணையில்' என்பர். ஆய்வாளர் கள் இனணயில்லாத கிராமம் என்பது இதன்பொருளாகும் ஈடுஇணையற்ற புலவர்கலளயும் பாணர்கலளயும் நாதஸ்வர தவில் வயலின் வாத்தியத்தில் மேதைகளையும் நாடகத்துறையின் பெருங்கலைஞர்களையும் அண்ணாவிமார்களையும் பரம்பரை பரம்பரையாகக்கொண்ட பதி எனும் மகிமையினாலும இணையில்ஆயிற்று.
புகழ்புத்த சத்தர்களையும் ஞானிகளையும் ஆயுள்வேதவைத்தியர்களையும் கொண்டுமிளிர்தமையினாலும வ{பூதியின்மகிமையை என்றும் உணர்த்திநிpன்றபெருமையினாலும் ஒல்லாந்த போர்த்க்கேய ஆங்கிலேய அமெரிக்க பாதிரிமார்களின் பிரசாரங்களில் மயங்கிஒருவர்பார்த்க்கேய ஆங்கிலேய அமெரிக்க பாதிரிமார்களின் பிரசாரங்களில் மயங்கிஒருவர்கூட மதம்மாறாதமாண்பினாலும் நூற்றுக்கணக்காணஓதுவார்களின் கூட்டுபிரார்தனைகளாலும் இணுவில் நறுமணம் கமழ்வதாயிற்று.
சிறைகதவு பூட்டுஉடைய சிவகாமிஅம்மைமேல் தோத்திரம்பாடிய சின்னத்தம்பிபுலவரும் நாவலர்வழியில் உயர்தமிழ்ஆற்றிய தவத்திருநடராஐ ஐயரும் தமிழகத்தில்திருவாவடுதுறை ஆதியின வித்துவானாகவிளங்கிய தணிகைபுராணத்திற்கு உரைஎழுதிய அம்பிகைபாகரும் பிறந்தபூமியாதலினாலும் வி.தட்சனாமூர்த்தியையும் பார்போற்றும் தவில்மேதையாக லயஞர்னகுபேரபூபதியாக உருவாக்கிய கிராமமாகவும் பிடிஅரிசிதொண்டினமூலம் இராசகோபுரம் அமைத்தபணியினாலும் இணையில்பாராட்டுவதற்குள்ளாயிற்று. பெரிய கோவில் என வரலாற்றில் இடம்பெற்றுள்ள நொச்சியம்பதியின் உலகபெருமஞ்சத்தினாலும ; இணுவில் மண்ணை ஆண்மீகவாதிகள் திருமண்என்றே கூறுவர்.மேலும் கல்விமான்களும் எழுத்தாளர்களும் கவிஞர்களும்இணுவிலுக்கு அணிசேர்க்கின்றனர்.
இணுவில் கிராமம் வரலாறு - பக்கம் 2
சமயரிதியாக எம்இணுவையம்பதியை நோக்கும்போது " திருக்கோயில் இல்லாத திருவிலூரும்" என்பது அப்பர் தேவாரம் "கோயில் இல்லாத ஊரில் குடியிருக்கவேண்டாம்" என்பது மூதுரை தமிழர் வாழ்வில் திருக்கோயில்களே சிறந்த செல்வமாக மதிக்கப்பட்டன அத்தகய கோயில்கள்நிறைந்தவை இணுவை அந்தவகையிலே கிழக்கிலே சிவகாமி அம்மை ஆலயம் விசாலாச்சி சமேத விஸ்வநாதர் ஆலயம் (காரைக்கால்)எலலையில் கருணாகரபிள்ளையார் ஆலயம் மத்தியில் அருணகிரிநாத சிவசுப்பிரமணியர் ஆலயம்(மஞ்சத்தடி)குருக்கள் சிவன் கோவிலும் பரமானந்தவல்லி அம்பாள் ஆலயமும் தெற்கில் ஸ்ரீபரராஜசேகரப்பிள்ளையார் ஆலயமும் நடுவிளாத்தி ஞானவைரவர் ஆலயமும் மேற்கில் நெச்சியெல்லைக்கந்தன்ஆலயம் ஸ்ரீசேராஜசேகரப்பிள்ளையார் ஆலயம் எலலையிலே கற்பகப்பிள்ளையார் ஆலயம் வடக்கில் வட்டிவினிப்பிள்ளையார் கண்ணகி அம்மன்கோவில் எல்லையில் பல்லப்பவைரவர்கோயிலுமாக நாற்புறமும் தெய்வமணங்கமளும் தொல்பதி இணுவையம்பதியாகும் .
தென்இணுவையம்பதி அமர்ந்து தெய்வீகஅருள்சுரந்து என்றவரிகள பரராஜசேகரவிநாயகனின் பெரமையை எடுத்துகூறுகிறது பண்டுதொட்டு பைந்தமிழும் திவ்வியமும் பழுத்தசைவநெறியும்போற்றிவருகின்ற இடமாக இணுவையம்மதி விளங்குகிறது. இவ்இணுவையம்பதியிலேஎழுந்தருளியிருக்கின்ற இவ்அலயம் இறைவனை பிரார்த்திக்கின்ற இடமாக அல்லாமல் வழிபாட்டோடுவாழ்வை வளம்படுத்தும் வகையிலும் செயற்படும் இடமாகவே இவ்ஆலயம்விளங்குகிறது. சமுதாயத்தை மேம்படுத்தும்நோக்கிலேயே இற்றைவரை அவஆலயம் செயற்பட்டுவருகிறது. ஏம்இணுவில்சமுதாயத்தைஇற்றைவரை காலமுமு: சுமூகNசுவையில:ஈடுபடுத:தி சமூகவளத:தைபெரக:கியநிலையில:இவ் ஆலயபணிமகத்தானது. முதலில் இவ்ஆலயத்தின் புர்வீகவரலாற்றை பற்றி அறிகின்றபோது ஈழத்தில்உடுவில் கோவில்பற்றைமுற்றுகையிட்ட போர்த்க்கேயர் இணுவில் என்னும் புர்வீககிராமத்து பரராஜசேகரப்பிளளையார் கோவிலைநிலைகுலையச்செய்தார்கள. ஆரசபரம்பரையில் பராமரிக்கப்பட்டஇக்கோயிலைபாதுகாக்கஎண்ணி இத்தலத்தை மடமென்றுவாதாடி ஓரளவிற்கு பாதுகாத்தனர் என்றுகர்ணபரமபரை ஒன்று கூறுகிறது . பாயிற்பக்கத்தில் மடம்அமைந்துஇருந்தமையினால் இக்கோயிலை மடத்துவாசல் பிள்ளையார் கோயில்என்றும் வழங்கலாயினர் கி.பி1475ல் சிங்கைபரராஜசேகரன்அரசனானபோது நல்லுர் ராசதானிசிறப்புறஅமைக்கப்பட்டதாகவும் நல்லூர்நகர் நாறறிசையிலும் நான்கு கோயில்அமைக்கப்பட்டதாகவும் இவனது காலத்தில் அரசகேசரியால்நீர்வேலியில் பிள்ளையார்கோயில் கட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது. (இவையாழ்ப்பாணமாலையில் காணப்படுகிறது)இவைஅனைத்தையும்நோக்மிடத்துஅக்காலத்தில் நீடித்துநிலைத்திருந்தஇணுவையம்பதிக்கோயில்பரராஜசேகரன் சகாப்தத்தில் அரசனது செல்வாக்கையும் ஆதரவையும்பெற்று அரசனதுநாமம்சூட்டபட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.இக்கோயில்மூலமூர்த்தியாக எழுந்தருளியிருக்கும் இறைவன்விநாயகப்பெருமானது திருஉருவம் தமிழகத்து சிற்பவிற்பன்னர்களால் அமைக்கப்பட்டு இங்கு கொண்டுவரப்பட்டது என்று கூறப்படுகிறது.இக்காலத்திற்கு தொண்டை நாட்டில் இருந்து பலசான்றோர்கள் வந்து குடீயேறி வாழ்ந்தமைக்கும்போதிய சாண்றுகள்உண்டு.
இத்தகய சிறப்புகள் பெற்ற இத்தலம் சமயவளர்சியில் கொண்டுள்ள முக்பியத்துவத்தினை ஆராய்கின்றபோது இத்தலத்தை அண்மித்துவாழ்ந்த சாணறோர்கள்பலர் சித்தாந்த சாஸ்திரங்களுள்பார்விரித்தநூல்களிலேசிறப்பாக உள்ளசிவஞானசித்தியாருக்கு எழுந்தஉரையமுதத்தைநுற்றருப்பத்தைந்து ஆண்டுகளிற்கு முன்அச்சிட்டுவெளியிட்டவரும் இணுவையம்பதியைச்சேர்ந்த சாண்றோரேஎன்றால் அதுமிகையாகாதுஅந்தவகையில் பல சாண்றோர்களைஇவ்ஆலயம் உருவாக்கியுள்ளது இந்த பண்பாட்டுவளர்சியில் கலைகள்முக்கியஇடத்தை பெறுகிறது.இவவகையில் கலைகளை வளர்த்இடமாகவும் இவ்ஆலயம் சிறப்பிடம்பெறுகிறுது.கட்டிடக்கலையின் சிறப்பை கோயில்அமைப்பு முறைகளிலும் சிற்பக்கலையின்விறப்பை பிரமாண்டமாய் அமைந்தகோபுரத்தில் அமைந்தசிற்பங்கள்மூலமும் ஓவியக்கலையின் சிறப்பை உள்சுற்றுபரகாரத்தில் சுவரில் வரையப்பட்டுள்ளவர்ணஓவியங்களும் எடுத்துகாட்டுகின்றன.இசைக்கலையும் இவ்ஆலயத்தை மையமாககொணடுவளர்ந்துள்ளது.
இவ்ஆலயத்தில்மகோற்சவம';பன்னிரண்டுதினங்கள்
நடைபெறுகிறது.இந்த நாட்களில் ஊரே விழாக்கோலம் கொண்டதாக காணப்படும்கோயில் சூழல் கிராமச்சூழல் துப்பரவுசெய';யப்பட்டுதுPPர்ய்னமயான இடமாககாணப்படுகிறது
அத்துடன் கோயிலின் உற்சவகாலங களில்அடியார்கள்அங்கப்பிரதட்சணம் செய்தல் அடியடித்தல்என்பனசிறப்பாகஇடம்பெறுகிறது மேலும் இவ்வாலயத்தில்விநாயகசஷ்டிபிள்ளையார்பெரும்கதை போன்றவையும்சிறப்பாககொண்டாடப்படுகிறது: இவ்ஆலயத்தில்சமயவளர்ச்;சிக்கா சமுதாயத்;தினர்பயன்பெறும்நோக்கில் உற்சவகாலங்களில்சமயப்பெரியார்கள் வரவழைக்கப்பட்டு சமயசொற்பொழிவுகள் நடைபெற்றுவருகின்றன இதன் மூலம் மக்களிடையே சமய உணர்வு வளர்க்கப்படுகிறது. திருநெறிய தமிழ் மறைக்கழகம் கோயிலை மையமாக வைத்து இயங்குகின்றது. இக்கழகமானது நாயன்மார்களது குருபூசை தினங்களை சிறப்பாக கொண்டாடுவதன் மூலமும் இத்தைகைய காலங்களில் பெரியார்கள் வரவழைக்கப்பட்டு நாயன்மார்கள் பெருமை மக்களுக்கு எடுத்தியம்பப்படுகிறது. மேலும் மக்களிடையே சமய அறிவை வளர்க்கின்ற நோக்கில் சமய அறிவுப்போட்டி, பண்ணிசைப்போட்டி, பேச்சுப்போட்டி என்பவற்றை நடாத்தி பரிசில்களை வெற்றிபெற்றவர்களுக்கு வழங்;கி வருகின்றனா.; மேலும் விநாயக சஷ்டி, கந்த சஷ்டி, காலங்களில் இலவச விநாயகர அகவல், கந்த சஷ்டி கவசம் போன்ற நூல்களை வழங்கி மக்களிடையே பக்தியுணர்வு வளர்க்கப்படுகிறது. இ;வ்வூர் மக்களால் விநாயகர்சதுர்த்தி சிறப்பாக அனுஷ்டிக்ப்படுகிறது. மேலும் மக்களிடையே திருமுறை ஓதும் மரபை இக்கழகம் செய்து வருகிறது. வெள்ளிக்கிழமைகளிலும் உற்சவ காலங்களிலும் சுவாமிக்கு பின்னால் திருமுறை ஓதும் மரபு காணப்படுகிறது. இதன்மூலம் இளைஞர்களிடைNயு சமய உணர்வு வளர்கப்படுகிறது.
மேலும் இவ் ஆலயத்தை மையமாகக் கொண்டு மக்களுடைய வாழ்வு வளம்படுத்தப்படுகிறது. கோயிற் தொண்டுகளை செய்ய ஊழியர்கள் சிலர் நியமிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் இவ் ஆலயத்திற்கு தேவையான பூமாலைகள் பூச்செண்டுகள் போன்றவற்றை செய்கின்ற பூமாலைத் தெண்டு செய்பவர்களுக்கு உதவுவதன் மூலமும் வேலை வாய்ப்பை ஓரளவு மக்களுக்கு வழங்குகின்றது. மேலும் இணுவில் பொதுநூலகமும் உற்சவகாலத்தில் தண்ணீர்ப்பந்தல் அமத்து தாக சாந்தி செய்வதும் மருதடி உற்சவ காலங்களிலும்; இக்கோயிலின் அருகாமையி;ல் தண்ணீர்பந்தல் அமைக்கப்பட்:டு மக்களுக்கு அதாவது தூர இடங்களிலிருந்து வரும் மக்களுக்காக தாக சாந்தி அளிக்கப்படுகிறது. அத்துடன் மக்களிடையே காணப்படும் பசிப்பிணியை போக்க தானங்கிளில் சிறந்த தானமான அன்னதானம் அளிக்கப்படுகிறது. தேர்த்திருவிழாகாலங்களிலும் அன்னதானம் வழங்கப்படுகிறது. இதன்மூலம் மக்களிடையே சமுதாய சேவையை திறம்பட ஆற்றி வருகிறது.
மேலும் ஊர் நன்மைக்காகவும் எம் ஈழ நன்மைக்காகவும் பல்வேறு யாகங்கள், அர்ச்சனைகள் இத்தலத்தில் இடம்பெற்று வருகிறது. இத்தலத்தின் பெருமைகளையும் மூர்த்தி பேதங்களின் சிறப்பையும் பல நூல்கள் எடுத்தியம்புவதன்மூலம் இத்தலம் பெருமை அடைகிறது. பஞ்சமுக விநாயகர் திருவூஞ்சல் பஞ்சமுகவிநாயகர் பெருமையை கூறுகிறது. இது கதிர்காமநாதனால் ஆக்கப்பட்டது. பிள்ளையார் கதை, விநாயகர்; அகவல் இதுவும் இணுவையூர் கதிர்காமநாதனால் ஆக்கப்பட்டது. மேலும் ஸ்ரீ பரராஜசேகரப்பிள்ளையார் பிரபந்தங்கள் என்ற நூலும் இத்தலத்தினதும் திருவுருவங்களினதும் சிறப்பினை எடுத்தியம்புகின்றது. 1997ம் ஆண்டு நடைபெற்ற கும்பாபிஷேக காலத்தின்போது ஒலிநாடா வெளியிடப்பட்டது. இது இணுவை பிம்மஸ்ரீ வீரமணி ஐயராலும் சுசீலாவாலும் இயற்றப்பட்டு ரமணியின் இசையமைப்பில் தென் இந்திய பாடகாரான மசேவியா வாசுதேவனால் பாடப்பட்டதாகும்.
இப்பாடல்கள் உள்ளத்தை உருக்கும் பாடல்களாகவும் மக்களிடையே பக்தியுணர்வை மேலும் வலுப்பெநச்செய்யும் வகையிலும் உதவிபுரிந்துள்ளன. 'உண்ணாமல் இருப்பேன் உறங்காமால் இருப்பேன்' என்ற வரிகள் உதாரணத்திற்கு போதுமானதாகும்.
இணுவில் கந்தசாமி கோயிலின் பூர்வீக வரலாற்றை நோக்கும்போது இணுவையின் வாழ்விற்கு பெரிய சன்னியாசியார் செய்;த பணிகள் அளப்பெரியன. அடிகளார் வாழ்வு தவத்தில் மகி;ழ்ந்தது. அம்மகிழ்வு மணம்பரப்பியபோது அம்மணத்தால் ஈர்க்ப்பட்டு வந்த சான்றோராகும். கலைஞர்களும் இணுவை மண்ணைத் திருத்தவமாக் கொண்டனர். அதனால் சைவமும் தமிழும் இணவையில் மலர்ச்சி பெற்றன. ஆடிகளால் இணுவில் கந்தசாமி கோயில் பெரும் புகழும் சிறப்புபும் பெற்றது. ஈழத்திருநாட்டில் உள்ள அறுபடை வீடுகளில்; ஒன்றாகக் கந்தாமி கோயிலும் இடம்பெற்றுள்ளது. மாவிட்டபுரம், செல்வசந்நிதி, கந்தவனக்கடவை, நல்லூர், கதிர்காமம் என்பன ஈழநாட்டின் அறுபடைவீடுகளாகும். இதனை குலசபா நாதன் தமது கட்டுரை மூலம் குறிப்பிட்டுள்ளார்.
அருட்பெருமையும்(மூர்த்தி) கோயிற்சிறப்பு(தலம்), திருநீர்ப்பெருமையும்(தீர்த்தம்), இணுவையூர்க்கந்தன் ஞானவைரவனாகாத்தோன்றிய பேரின்பம் நல்கும் திற்த்தினை விளக்கும்மாற்றால் அவனால்தான் இயலும் இதனை உணாந்து உறுதிப்படுத்தியவரே இணுவையூர் சந்நியாசியார் கோயில் கொண்ட இறைவனை சாந்தியடியான், விளாத்தியடியான், எனப் பல பெயர் கொண்டழைப்பர். இக்கோயிலின் நேர்வாசாலில் திரு நீர்நிலையொன்று உள்ளது. தீராத வினைகளைத் தீர்க்கும் பேராற்றல் வாய்ந்தது. இரவு,பகல் என்றுபராது அடியார்கள் நாள்தோறும் நீராடுவதனை இங்கு காணலாம். ஆடஷதன் பயனை இன்று அனுபவித்து வருகின்றார்கள்.
இணுவைக்கந்தன் ஆலயமானது அன்றுதொடக்கம் இன்;று வரை ஊர் அன்பர்களாலும் அயலூர் அன்பர்களாலும் வழங்கப்பெற்ற நன்கொடைகளால் ஆலயம் இனறு தலை நிமிர்ந்து நிற்கும் அளவிற்கு அழகிய கலை அம்சம் நிறைந்த வாயிற்கோபுரமும் அதன் அருகில் நாத ஒலி எழுப்பும் இரணடு மணிக்கூட்டுக்கோபுரமும் அதனை அடுத்த மணிமண்டபமும் அது மட்டுமல்லாது முன்னவர்களின் அயராத முயற்சியால் உருhவாக்கப்பட்ட உலகப்பெருமஞ்சமும் இக்கோயிலுக்கு மேன்மேலும் அணிசேர்க்கின்றன. இதைஆக்கிய பெருமை சன்னியாசியாரைச்சாரும். இந்த மஞ்சம் இணவைக்கந்தனுக்கு மட்டுமே உரித்துடையதன்று தமிழ்பேசும் நல்லுலகிற்கே சொந்தமானது. இம்மஞ்சமானது திராவிட சிற்பக் கலையின் உறைவிடமாய் அமைந்துள்ளது. இலங்கை இந்திய கலாசாரத் தொடர்பிற்கு எடுத்துக்காட்டாக அமைவது பண்பாடும் கைவண்ணமும் நிறைந்த இந்திய திராவிடச் சிற்பங்களின் கலைத்திறனையும்
இணுவில் கந்தசுவாமி கோவிலில் உள்ள கடாவாகனம் உயிரோவியமாக அமைந்துள்ளது. இதன் கொம்புகள் இயற்கை அமைப்பினைப் பெற்றுள்ளது. சிறந்த சிற்பக்கலைக்கு உறைவிடமாக இருக்கும் தகுதி இதற்கு உண்டு. இக்கோயிலலில் உள்ள ஆறுமுகக் கடவுளின் திருவுருவ அமைப்பும் சூரனின் உருவ அமைப்பும் மிகச் சிறப்புடன் அமைவு பெற்றுள்ளன. இவ்வாறு பல சிறப்புகளைக் கொண்டு காணப்படும் இவ்வாலயம் சமய வளர்ச்சிகளைக் கொண்டு காணப்படும். இவ்வாலயம் சமய வளர்ச்சிக்கும் வாழ்வதற்கும் உறைவிடமாக அமைந்துள்ளது. இங்கு விஷேட தினங்களாக ஆலய மகோற்சவமும் கந்தசஷ்டியும் அமைந்துள்ளது.
ஆலயத்திற்கு அப்பால் சமயத்தை வளர்க்கும் நிறுவனமாக இளந்தொண்டர் சபை காணப்படுகின்றது. இந்தத நிறுவனம் மகோற்சவ காலங்களில் ஆண்டுதோறும் சமய அறிவுப் போட்டிகளை நடாத்தி அதிலல் வெற்றி பெறுபவர்களுக்கு சிறந்த பரிசில்களை வழங்கி வருகின்றது. இது மட்டுமல்லாது பல புராணக் கதைகளை மேடையேற்றி வருகின்றது. இந்தவாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் சமய தீட்ஷை பெற்றிருக்க வேண்டும். இப்பணியை செவ்வனே நிறைவேற்ற வருடத்தில் இரு தடவைகள் தீட்னவி கொடுக்கும் பணணியைச் செய்து வருகின்றது. மற்றும் மகோற்சவ காலங்களில் பண்ணிசைபாடும் மரபையும் பேணி சமய வளர்ச்சிக்கு உறுதுணை புரிகின்றது.
சமய ரீதியில் ஆத்மீகத் துறையில் வாழ்ந்த அருள் ஒளி பரப்பி ஞான வாழ்க்கைக்குரிய முத்திரை பதித்த சாதுக்களையும் தபோதனர்களையும் இவ்வூர் தன்னகத்தே கொண்டது. அந்த வகையில் இணுவில் தந்த ஞான பழமாகவும் நல்ல குருசாதனாகவும் வாழ்ந்து மக்கள் மத்தியில் உள்ளத் தெளிவை ஏற்படுத்தியவர் வடிவேற் சுவாமிகள் இவருடைய அருள் வெளிக்காட்டலினால் ஆயிரம் ஆயிரம் உள்ளங்கள் தெளிவு பெற்றன. இவருடன் பெரிய சன்னாசியாரும் ஊர் மக்களை நல்வழிப்படுத்தி சிறந்த சித்தராக மிளிர்ந்தனர்.
நிறைவாக சமயய ரீதியில் வளர்ச்சிக்கும் அதனோடு இணைந்த சித்தர்களின் தோற்றமும் சமய வழிகாட்டல்களுக்கு அடிப்படையாக அமைந்தன. அடிகளாரின் அருட்திறனையும் எடுத்து விளக்குவதே இணுவை மஞ்சம் இன்றுவரை தன்னிலை தெரியாது கலையழகோடு திகழ்வதற்கு அவையே ஏதுவாகும். இம் மஞ்சம் நாற்படிக்கு மேற்பட்ட உயரமுடையது. தத்துவ உண்மையினை விளக்குவது மட்டுமல்லாது கலை புலவர்களாலும் வெளிநாட்டு நல்லறிஞர்களாலும் வியந்து போற்றுதற்குரியது. மஞ்சத்திற்கு ஆயிரம் மணிகளையும் ஆய்ரம் சதங்கைகளையும் முகமதியப் பெரியார் செய்யது என்பவர் அறநன்கொடையாகக் கொடு;த்தார்.
இணுவில் கிராமம் வரலாறு - பக்கம் 3
இணுவில் கிராமத்தின் சமூக அபிவிருத்தி ஆனது பன்முகப்படுத்தப்பட்ட அம்சங்களின் கூட்டு வளர்ச்சியால் தோன்றியது எனலாம். இவ்வகையில் புவியியல், பொருளாதார சமூக காரணிகள் இவ் அபிவிருத்திக்கு அடிப்படையாக அமைகிறன. சமூக அபிவிருத்திப் பின்னனி பற்றி நோக்குகையில்.
சிறுகைத் தொழில்கள் விவசாயம் போன்ற பொருளாதார நடவடிக்கைகள் அபிவிருத்தி அடையும் போது சமுதாயத்தில் ஒற்றுமை, சமூக வேறுபாடு காட்டாமை, நிறுவன மயப்படுத்தல் போன்ற அம்சங்களில் சமூகத்தில் அபிவிருத்தி ஏற்படுகிறது. இச் சமூகம் ஒரு மனப்பான்மை பெற்றதாக சமூக பொருளாதார, கலாச்சார தொடர்பியல் அம்சங்களில் தம்மிடையே ஒருமைப்பாட்டைக் கொண்டு இருப்பதுடன் சூழவுள்ள ஏனைய சமூகத்திலிருந்து ஓரளவு வேறுபாடுகளைக் கொண்டனவாக அமை;ந்துள்ளது.
இணுவில் கிராமமானது வலி தெற்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவில் அமைந்துள்ளது. இது 4 கிராம அலுவர் பிரிவுகளை உள்ளடக்கி உள்ளது. அவையாவன J/188, J/190, J/191 என்பனவாகும். இதில் நாம் J/188, J/191 ஆகிய பிரிவுகளை விரிவாய் நோக்குவோம்.
இணுவில் கிராமமானது யாழ் நகரிலிருந்து வடக்கே 4 மைல் தொலைவிலும் காங்கேசன் துறையிலிருந்து தெற்கே 8 மைல் தொலைவிலும் அமைந்துள்ளது. மேலும் யாழ்ப்பாணத்திலிருந்து காங்கேசன்துறை நோக்கி செல்லும் மத்திய நெடுச்சாலை இணுவில் ஊடாகச் செல்வதால் போக்குவரத்திற்கும் இவ்வூர் வசதியாய் அமைந்திருக்கிறது.
இக்கிராமத்தின் புவியியல் பின்னனியை நோக்குகையில் தரைத் தோற்றத்தினை எடுத்துக் கொண்டால் எங்கும் சமதரையும் மயோசின் காலத்து சுண்ணக் கற்பாறைகளைக் கொண்டதாகவும் காணப்படுகின்றது. காலநிலையை எடுத்துக் கொண்டால் வடகீழ்ப் பருவப் பெயச்சிக் காற்றினாலும், சூறாவளியாலும் இக்கிராமம் ஐப்பசி, கார்த்திகை, மார்கழி மாதங்களில் மழைப் பெறுகின்றது. ஏனைய காலங்களில் வரட்சியாகவே இருக்கும் வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி மாதங்களில் வரட்சி கூடியதாக இருக்கும். இக்காலத்திற் கோடைக் காற்று வீசும்.
வரட்சிப் பருவம் கூடியதாய் இருப்பதால் வரட்சியைத் தாங்கக் கூடிய இயற்கைத் தாவரங்களே காணப்படுகின்றன. பனை, கள்ளிமரங்கபள், பற்றைக்காடுகள் காணப்படுகின்றன. இன்று பனையைத் தவிர ஏனைய இயற்கைத் தாவரங்களிற் பெரும்பாலனவை அழிக்கப்பட்டு விட்டன. பனை மரங்களும் தொகையில் மிகவும் குறைந்து செல்வதைக் காணலாம். இதைத் தவிர நீர் இறைக்கும் பம்பிகளின் அறிமுகத்தைத் தொடர்ந்து இக்கிராமங்களின் வீடுகளில் மா, பலா, வாழை போனற சுவைதரும் கனி மரங்களும் தென்னை, கமுகு, வேம்பு போன்ற மரங்களும் அதிகளவிற் காணப்படுகின்றன.
இணுவில் கிராமமானது யாழ்குடாநாட்டின் வளமான பிரதேசமான செம்மண் பிரதேசத்தில் காணப்படுகின்றது. இங்கு செம்மண் பிரதேசமாகவிருந்த போதிலும் இடை இடையே கற்பாறைகளும் காணப்படுகின்றன. இன்று இவை படிப்படியாய் அகழ்ந்து எடுக்கப்பட்டு பசளைகளிடப்பட்டு விவசாய நிலங்களாக மாற்றப்பட்டு வருவதைக் காணக் கூடியதாக உள்ளது.
நீர்வளத்தினை எடுத்துக் கொண்டால் ஆரம்ப காலத்தில் மழைநீர் குளங்களில் சேகரிக்கப்பட்டதாகவும் அவை விவசாயத்திற்கு பயன்பட்டதாகவும் அறியப்படுகிறது. இன்றும் குளக்கரை என்றற பகுதிக்கருகில் நெல் வேளாண்மை செய்யப்படுவதைக் காணக்கூடியதாய் இருக்கிறது. சுண்ணாம்பு பிரதேசங்களிற் தரைகீழ் நீர் காணப்படுகிறது. இப்பிரதேசத்திற் பெய்யும் மழை நிலத்தினு;டாக சென்று நிலக்கீழ் நீராக தேங்கிக் காணப்படுகின்றது.. இந்நீரை மக்கள் கிணறுகள், குழாய்க் கிணறுகள் மூலம் பெற்று வீட்டு தேவைக்கும் விவசாய தேவைக்கும் பயன்படுத்துகின்றனர்.
பொருளாதார பின்னனியை எடுத்து நோக்கும் போது இக்கிராமத்தின் பொருளாதாரத்தின் உயிர்நாடியாக விளங்குவது விவசாயமாகும். இக்கிராமத்தின் பெரும்பான்மை நிலப்பகுதி (J/191) விவசாய நிலங்களாகவும் வீட்டுத் தோட்டங்களாகவும் காணப்படுகின்றது. இக்கிராமமானது செம்மண் பிரதேசமாகவும் தண்ணீர் வளம் கொண்டதாகவும் காணப்படுவதே விவசாயத்திற் தங்கியிருக்க முக்கிய காரணமாயிற்று. விவசாயத்தை வாழ்க்கை தொழிலாகக் கொண்ட இவ்வூரில் எந்நாளும் பசுமையையே காணமுடிகிறது. கறவைப் பசுக்களும், ஆடுகளும் இவ்வூரவர்களின் கால்நடைச் செல்வங்களாகும். இம் மண்ணில் எப்பயிரும் செழித்து வளரும் மா, பலா, தென்னை, கமுகு, வாழை முதலிய உயர் மரங்களும் சாமை, குரக்கன், பயறு முதலிய தானிய வகைகளும் மரவள்ளி, கறனை, இராசவள்ளி, கொடிவள்ளி, உருளைக்கிழங்கு முதலிய கிழங்கு வகைகளும் வெண்டி, தக்காளி, கத்தரி, மிளகாய் முதலிய காய்கறிகளும் இவ்வூரில் விவசாயப் பயிர்களாகக் காணப்படுகின்றன. இதனால் இங்கு விளைவிக்கும் பொருட்களை விற்பளை செய்வவதற்கான நானங்காடி (இணுவில் சந்தை) இவ்வு|+ரிற் பல காலமாய் இருந்து வருவதைக் காணலாம். இன்று புகையிலை, வெங்காயம், மிளகாய் போன்ற பயிர்கள் வருமானத்தை ஈட்டித் தரும் பயிர்களாய் அதாவது பணப்பயிர்களாய் வளர்க்கப்படுகின்றன. இவை இலங்கையின் ஏனைய பகுதிகட்கு குறிப்பாக தென்பகுதிகட்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருவதைக் காணக்கூடியதாயுள்ளது.
இவை தவிர இக்கிராமத்தின் பொருளாதாரத்தில் சிறு கைத்தொழில் முயற்சிகளும் முக்கியம் பெறுகின்றன. இவை இக்கிராமத்தின் மக்களுக்கு தொழில் வழங்கும் ஸ்தாபனமாக காணப்படுவதை அவதானிக்கலாம். இவ்வகையில் புகையிலையை மூலப் பொருளாகக் கொண்ட சுருட்டு கைத்தொழில் வீடுகள் எங்கும் பரவலாக காணப்படுகிறது. இவை பெரும்பாலும் வெளிமாகாணங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஆனால் இன்று கைத்தொழில் யுத்த சூழ்நிலைகள் இடப்பெயர்வுகள் போன்ற காரணங்களால் பாதிப்புற்ற நிலையில் அங்கு ஒன்றும் இங்கு ஒன்றுமாக காணப்படுகின்றது. இது தவிர ஆரம்ப காலங்களில் பருத்தி நெசவுத் தொழில்கள் சிறப்பாக இணுவில் கந்தசுவாமி கோயிலுக்கு அருகிலும், இணுவில் மஞ்சடித்தடி அம்பலவாணர் கந்தசுவாமி கோயிலுக்கு அண்மையிலும் அமைந்து காணப்பட்டன. இது தவிர நவீன இயந்திரங்களின் உதவியுடன் துணி நெய்யும் "பவலூம்" தொழிற்சாலைகளும் அமைந்திருப்பதைக் காண முடிகிறது.
மேலும் இங்கு அமைந்த அண்ணா தொழிற்சாலை அப்பளம், ஊதுபத்தி, இனிப்புக்கள், மாவகை (உழுந்து, பயறு, கடலை, அரிசி) மற்றும் பல்வேறு உற்பத்திகளை மேற்கொண்டு வருகின்றது. இதுவே ஆரம்ப சிறுதொழிலாக ஆரம்பிக்கப்பட்டு இன்று பெரியளவில் வளர்ச்சியடைந்துள்ளது. இதன் கிளைகள் இணுவில் ஆஸ்பத்திரிக்கு அருகாமையிலும் உரும்பிராய் வீதியிலும் அமைந்துள்ளதைக் காணலாம். இக்கிராம மக்கள் பெரும்பான்மையோருக்கு வேலை வாய்ப்பை வழங்கும் நிறுவனமாக காணப்படுகிறது. இவை தவிர ஆங்காங்கே அரிசி ஆலைகள், புடவை (காமென்ஸ்) என்பன அமைந்து மக்களுக்கு தொழிலை வழங்கிவருவதைக் காணமுடிகிறது.
இக்கிராம வளர்ச்சிக்குரிய சமூக காரணிகளாக
1. கூட்டுறவு மனப்பாங்கு
2. அமைதியான பாதுகாப்பான சூழல்
3. தொழில் நுட்பவிருத்தி
ஆகியன குறிப்பிடலாம். நிரமந்தரமாக கிராமிய வளர்ச்சிக்கு எப்பிதேசத்திலும் உள்ளுரிலும் சுற்றுப்புற சூழலிலும் அமைதி நிலவுதல் வேண்டும். இவ்வகை கூட்டுறவு மனப்பாங்கு என்பது இங்கு மிகவும் விரும்பத்தக்க ஒன்றாக காணப்படுகிறது. இங்கு சாதி வேறுபாடு காட்டாது வேற்றுமையில் ஒற்றுமை கொண்டு மக்கள் வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இவ்வகையில் கோயிலும் இணுவில் கிராம மக்களின் வாழ்க்கையும் பின்னனிப் பிணைந்த ஒன்றாக காணப்படுகிறது. இதுமட்டுமன்றி கோயில் வேலை செய்யம் இளைஞர்கள் கூட்டுறவு மனப்பாண்மையுடன் கோயிற் தொண்டுகள் செய்து வருவதைக் காணலாம். இத்தொண்டு செய்யும் இளைஞர்கள் இணுவிற் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் இவர்கள் கூட்டுறவு மனப்பாங்குடன் தங்களுக்குள் ஒற்றுமையுடன் கூட்டுதல், கழுவுதல், சுவாமிகாவுதல் போன்ற பணியில் ஈடுபடுவதைக் காண முடிகிறது.
இங்குள்ள பொதுநூலகத்தை எடுத்துக் கொண்டால் நூலக அங்கத்தினர் கூட்டுறவு மனப்பாங்குடன் சமூக வளர்ச்சிக்கு அருந்தொண்டாற்றி வருகின்றனர். தொழில்நுட்ப ரீதியில் கணனிக் கல்வியை வழங்கியும் சமூகத்தில் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்க வாசிப்பு பகுதியையம் மற்றும் உள்ளக வெளியக விளையாட்டுக்களையும் மகோற்சவ காலங்களில் தாகசாந்தி நிறுவனமாகவும் நூல்கள் யாவற்றையும் வெளியிட்டு நூல் ஆசிரியர்களை ஊக்கப்படுத்தியும் மக்களுக்கு இலவச கருத்தரங்குகள் என சமூக சம்பந்தமாக மேற்கொண்டு வருகிறது.
கிராம குழுக்கள் வளர்ச்சியடைய கூட்டுறவு அம்சம் இன்றியமையாதது. கிராமங்களில் ஒருவரொடு ஒருவர் நெருக்கமாக இணையும் பண்பு காணப்படுகிறது. வளத்தை துப்பிரயோகம் செய்யாதிருத்தல் சுகாதாரம் பேணுதல் பொதுச் சொத்தை மூடிப் பேணல் கிராமிய கல்வி வளர்ச்சி மேம்பாடு என்பனவற்றுக்கு கூட்டுறவு அம்சம் இனறியமையாததாக உள்ளது. இவ்வாறு செயற்படும் ஓர் கிராமிய குழுவாக இணுவில் பொதுநூலகம் செயற்படுகிறது.
பொதுவாக அபிவிருத்தி எண்ணக்கருவில் உள்ளடக்கப்படும் அணைத்து அம்சங்களையும் எமது ஊர் சமூகத்தினையே வளர்ச்சி பெற்றுள்ளதை நன்கு அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இந்த வகையில் இயற்கையாக கிடைக்கும் மூலவளங்களைப் பயன்படுத்தி விவசாயம், சிறுகைத்தொழில் இவற்றின் மூலம் கைத்தொழில் வளர்ச்சி மற்றும் சந்தை வாய்ப்புக்கள், போக்குவரத்து வசதிகள், இவை எல்லாவற்றிக்கும் சிகரம் வைத்தால் போல் கல்வி அறிவுள்ள சமுதாயமே